1மா(ய)ம்மா(ய)னி நே 2பிலசிதே
மா(ட்லா)ட3 ராதா3 3நாதோ அம்பா3
அனுபல்லவி
4ந்யாயமா (மீ(னா)(க்ஷ)ம்மா) மீ(னா)க்ஷி(கி)தி3
நின்னு வினா 5வேரே தி3க்(கெ)வ(ரு)ன்னாரு (மாயம்மா)
சரணம்
சரணம் 1
ஸரஸிஜ ப4வ ஹரி ஹர நுத ஸு-லலித
நீ பத3 பங்கஜமுல
ஸ்தி2ர(ம)னி நம்மிதி நம்மிதி நம்மிதினி
கருண ஜூட3வே 6காத்யாயனி காளிகா ப4வானி
பரமேஸ்1வரி ஸுந்த3ரேஸு1 ராணி
பா3(லா)ம்பா3 மது4ர வாணி (மாயம்மா)
சரணம் 2
வினுத ஜன பாப விமோசனி ஓ ஜனனீ
க4ன நீல வேணி
7வித3ளித தா3னவ மண்ட3ல த3மனீ
வனஜ லோசனா ஸுதா4-க(ரா)னனா வர தா3யகி
அனயமு நினு கோரி(யு)ன்னா(ன)ம்மா
ப3ங்கா3ரு பொ3ம்மா (மாயம்மா)
சரணம் 3
அப4ய(மொ)ஸகி3 நன்னு ப்3ரோவுமு ஓ வரதா3
8நெர தா3தவு க3தா3
அம்பி3கா பி3ட்3ட3பை கொ3ப்பக3 த3ய ராதா3
அகி2ல லோக ஜனனீ அனாத2 ரக்ஷகி
அனேடி பி3ருது3 கா3தா3
வைப4வமு க3ல ஸ்1யாம க்ரு2ஷ்ண ஸோத3ரி
9வீர ஸ1க்தி த்ரிபுர ஸுந்த3ரி (மாயம்மா)
பொருள் - சுருக்கம்
- அம்பா!
- மீனாட்சியம்மா!
- கமலத்தில் உறைவோன், அரி, அரன் போற்றும், இனிய லலிதையே! காத்தியாயினீ, காளிகா, பவானீ! பரமேசன், சுந்தரேசனின் ராணீ! பாலாம்பா! இன்சொல்லினளே!
- துதிப்போரின் பாவம் களைபவளே! ஓ ஈன்றவளே! கார்முகில் நிகர் கருங்கூந்தலினளே! அசுரர் கும்பலை அழித்தவளே! கமலக்கண்ணீ! அமிழ்துக் கதிரோன் முகத்தவளே! வரமருள்பவளே! தங்கச் சிலையே!
- ஒ வரமருள்பவளே! அம்பிகையே! அனைத்துலகையும் ஈன்றவளே! பெருஞ் சிறப்புடைய, சியாம கிருஷ்ணனுக்கு சோதரியே! வீர சக்தீ! திரிபுர சுந்தரீ!
- 'எந்தாயே' என நான் அழைத்தால், பேசக்கூடாதா, என்னுடன்,
- நியாயமா?
- மீனாட்சிக்கு, இது நியாயமா?
- உன்னையன்றி, வேறே புகல் யாருளர்?
- உனது திருவடிக் கமலங்களை திரமென நம்பினேன், நம்பினேன், நம்பினேனே.
- எவ்வமயமும் உன்னை கோரியுள்ளேனம்மா.
- மிக்கு கொடையாளியன்றோ?
- உனது குழந்தையின் மீது பெரும் கருணை வாராதா?
- 'அனாதைகளைக் காப்பவள்' எனும் விருது அன்றோ (உனக்கு)?
- கருணை காட்டுவாயம்மா.
- அபயமளித்து என்னைக் காப்பாயம்மா.
- நியாயமா?
- 'எந்தாயே' என நான் அழைத்தால், பேசக்கூடாதா, என்னுடன்?
பதம் பிரித்தல் - பொருள்
பல்லவி
மா/-அம்மா/-அனி/ நே/ பிலசிதே/
'எம்/ தாயே/' என/ நான்/ அழைத்தால்/
மாடலு-ஆட3/ ராதா3/ நாதோ/ அம்பா3/
பேச/ கூடாதா/ என்னுடன்/ அம்பா/
அனுபல்லவி
ந்யாயமா/ (மீன-அக்ஷி/-அம்மா/) மீனாக்ஷிகி/-இதி3/
நியாயமா/ மீனாட்சி/ யம்மா/ மீனாட்சிக்கு/ இது/ (நியாயமா?)
நின்னு/ வினா/ வேரே/ தி3க்கு/-எவரு/-உன்னாரு/ (மாயம்மா)
உன்னை/ யன்றி/ வேறே/ புகல்/ யார்/ உளர்/
சரணம்
சரணம் 1
ஸரஸிஜ/ ப4வ/ ஹரி/ ஹர/ நுத/ ஸு-லலித/
கமலத்தில்/ உறைவோன்/ அரி/ அரன்/ போற்றும்/ இனிய லலிதையே/
நீ/ பத3/ பங்கஜமுல/
உனது/ திருவடி/ கமலங்களை/
ஸ்தி2ரமு/-அனி/ நம்மிதி/ நம்மிதி/ நம்மிதினி/
திரம்/ என/ நம்பினேன்/ நம்பினேன்/ நம்பினேனே/
கருண/ ஜூட3வே/ காத்யாயனி/ காளிகா/ ப4வானி/
கருணை/ காட்டுவாயம்மா/ காத்தியாயினீ/ காளிகா/ பவானீ/
பரமேஸ்1வரி/ ஸுந்த3ரேஸு1/ ராணி/
பரமேசன்/ சுந்தரேசனின்/ ராணீ/
பா3லா/-அம்பா3/ மது4ர வாணி/ (மாயம்மா)
பாலா/ அம்பா/ இன்சொல்லினளே/
சரணம் 2
வினுத ஜன/ பாப/ விமோசனி/ ஓ ஜனனீ/
துதிப்போரின்/ பாவம்/ களைபவளே/ ஓ ஈன்றவளே/
க4ன/ நீல/ வேணி/
கார்முகில்/ (நிகர்) கருங்/ கூந்தலினளே/
வித3ளித/ தா3னவ/ மண்ட3ல/ த3மனீ/
அழித்தவளே/ அசுரர்/ கும்பலை/ அழித்தவளே/
வனஜ/ லோசனா/ ஸுதா4-கர/-ஆனனா/ வர/ தா3யகி/
கமல/ கண்ணீ/ அமிழ்துக் கதிரோன்/ முகத்தவளே/ வரம்/ அருள்பவளே/
அனயமு/ நினு/ கோரி/-உன்னானு/-அம்மா/
எவ்வமயமும்/ உன்னை/ கோரி/ யுள்ளேன்/ அம்மா/
ப3ங்கா3ரு/ பொ3ம்மா/ (மாயம்மா)
தங்க/ சிலையே/
சரணம் 3
அப4யமு/-ஒஸகி3/ நன்னு/ ப்3ரோவுமு/ ஓ வரதா3/
அபயம்/ அளித்து/ என்னை/ காப்பாயம்மா/ ஒ வரமருள்பவளே/
நெர/ தா3தவு/ க3தா3/
மிக்கு/ கொடையாளி/ யன்றோ/'
அம்பி3கா/ பி3ட்3ட3பை/ கொ3ப்பக3/ த3ய/ ராதா3/
அம்பிகையே/ (உனது) குழந்தையின் மீது/ பெரும்/ கருணை/ வாராதா/
அகி2ல/ லோக/ ஜனனீ/ அனாத2/ ரக்ஷகி/
அனைத்து/ உலகையும்/ ஈன்றவளே/ 'அனாதைகளை/ காப்பவள்/'
அனேடி/ பி3ருது3/ கா3தா3/
எனும்/ விருது/ அன்றோ (உனக்கு)/
வைப4வமு/ க3ல/ ஸ்1யாம/ க்ரு2ஷ்ண/ ஸோத3ரி/
பெருஞ் சிறப்பு/ உடைய/ சியாம/ கிருஷ்ணனுக்கு/ சோதரியே/
வீர/ ஸ1க்தி/ த்ரிபுர/ ஸுந்த3ரி/ (மாயம்மா)
வீர/ சக்தீ/ திரிபுர/ சுந்தரீ/
குறிப்புக்கள் - (Notes)
வேறுபாடுகள் - (Pathanthara)
1 - மாயம்மாயனி - மாயம்மயனி : 'மாயம்ம' என்பது, இவ்விடத்தில் சரியெனப்படவில்லை.
2 - பிலசிதே - பிலிசிதே.
3 - நாதோ அம்பா3 - (நாதோ) அம்பா3.
4 - ந்யாயமா (மீனாக்ஷம்மா) மீனாக்ஷிகிதி3 - ந்யாயமா ஸ்ரீ மீனாக்ஷம்மா மீனாக்ஷிகிதி3 - ந்யாயமா மீனாக்ஷம்மா : இந்த கிருதி முழுதும் முன்னிலையில் உள்ளது. ஆனால், 'மீனாக்ஷிகி' (மீனாட்சிக்கு) என்பது படர்க்கையில் உள்ளது. எனவே, 'மீனாக்ஷிகிதி3' என்பது ஐயத்திற்குரியது.
5 - வேரே - வேரெ.
7 - மண்ட3ல த3மனீ - மண்ட3ல ஸ1மனீ.
8 - நெர தா3தவு - நிர தா3தவு : 'நிர' என்பது சரியெனப்படவில்லை.
Top
மேற்கோள்கள்
விளக்கம்
6 - காத்யாயனி காளிகா ப4வானி பா3லா - இவையெல்லாம், 'லலிதா மகா திரிபுர சுந்தரி'யின் பெயர்களாகும். அந்தப் பெயரை (திரிபுர சுந்தரி), சியாமா சாஸ்திரி, மூன்றாவது சரணத்தின் கடைசியில் குறிப்பிடுகின்றார்.
7 - வித3ளித தா3னவ மண்ட3ல த3மனீ - 'வித3ளித' மற்றும் 'த3மனீ' என்பதற்கு 'அழித்தவள்' என்று பொருள்படும். 'த3மனீ' என்பதற்கு வேறுபாடாகிய, 'ஸ1மனீ' என்ற சொல்லும் அங்ஙனமே. எனவே, 'வித3ளித த3மனீ' அல்லது 'வித3ளித ஸ1மனீ' என்பவற்றில், ஏதோ ஒரு சொல் மிகையாகும்.
Top
9 - வீர ஸ1க்தி - 'வீர' என்ற சொல்லுக்கு சக்தி வழிபாட்டில் தனிப்பட்டப் பொருளுண்டு.
கமலத்தில் உறைவோன் - பிரமன்
அமிழ்துக் கதிரோன் - மதி
சியாம கிருஷ்ணன் - விஷ்ணு - ஆசிரியர் முத்திரை
Top
Updated on 30 Mar 2011
No comments:
Post a Comment