Sunday, July 10, 2011

ஸ்யாமா ஸாஸ்த்ரி கிருதி - தல்லி நின்னு - ராகம் கல்யாணி - Talli Ninnu - Raga Kalyani

பல்லவி
தல்லி நின்னு நெர நம்மினானு வினவே

அனுபல்லவி
எல்ல லோகமுல(கா)தா4ரமை(யு)ன்ன நா (தல்லி)

சரணம்
சரணம் 1
ஆதி31க்தி நீவு 1பராகு ஸேயகு
2ஆத3ரிஞ்சுட(கி)தி3 மஞ்சி ஸமயமு
33தா3 ஸரோஜ ப4(வா)ச்யுத ஸ1ம்பு4 நுத
4பதா3 நீது3 தா3(ஸா)னுதா3ஸுடே3 (தல்லி)


சரணம் 2
தே3வி நீது3 ஸரி ஸமான(மெ)வ(ர)னி
தே3வ ராஜ முனுலு 5நின்னு பொக333
6நா வெத தீ3ர்சி பி3ரான வரா(லொ)ஸகி3
நன்னு ப்3ரோவ நீ ஜால(மே)லனே (தல்லி)


சரணம் 3
ஸ்1யாம க்ரு2ஷ்ண பரிபாலினீ ஜனனீ
7காமி(தா)ர்த2 ப்ரதா3 பங்கஜ லோசனீ
8கௌமாரீ ராணீ புராணீ 9பரா ஸ1க்தீ
10காம கோடி பீட2 வாஸினீ (தல்லி)


பொருள் - சுருக்கம்
  • தாயே!
  • அனைத்துலகங்களுக்கும் ஆதாரமாகவுள்ள, எனது தாயே!
  • ஆதி சக்தீ! மலரோன், அச்சுதன், சம்பு போற்றும், திருவடியினளே!
  • தேவீ!
  • சியாம கிருஷ்ணனைப் பேணுபவளே! ஈன்றவளே! விரும்பிய பொருட்களைத் தருபவளே! பங்கயற் கண்ணீ! கௌமாரீ! ராணீ! பழம்பொருளே! பரா சக்தீ! காம கோடி பீடத்தில் உறைபவளே!

  • உன்னை மிக்கு நம்பியுள்ளேன்.
  • கேளாயம்மா.

    • நீ பராக்கு செய்யாதே.
    • ஆதரிப்பதற்கிது, நல்ல சமயம் அன்றோ?
    • உனது தொண்டருக்குத் தொண்டனம்மா.

    • உனது சரி சமானமெவரென, தேவர், அரசர்கள், முனிவர்கள் புகழ,
    • எனது வேதனைகளைத் தீர்த்து, விரைவாக வரங்களருளி, என்னைக் காப்பதற்கு, தாமதமேனம்மா?


  • உன்னை மிக்கு நம்பியுள்ளேன்.



பதம் பிரித்தல் - பொருள்
பல்லவி
தல்லி/ நின்னு/ நெர/ நம்மினானு/ வினவே/
தாயே/ உன்னை/ மிக்கு/ நம்பியுள்ளேன்/ கேளாயம்மா/


அனுபல்லவி
எல்ல/ லோகமுலகு/-ஆதா4ரமை/-உன்ன/ நா/ (தல்லி)
அனைத்து/ உலகங்களுக்கும்/ ஆதாரமாக/ வுள்ள/ எனது/ (தாயே)


சரணம்
சரணம் 1
ஆதி3/ ஸ1க்தி/ நீவு/ பராகு/ ஸேயகு/
ஆதி/ சக்தீ/ நீ/ பராக்கு/ செய்யாதே/

ஆத3ரிஞ்சுடகு/-இதி3/ மஞ்சி/ ஸமயமு/
ஆதரிப்பதற்கு/ இது/ நல்ல/ சமயம்/

3தா3/ ஸரோஜ ப4வ/-அச்யுத/ ஸ1ம்பு4/ நுத/
அன்றோ/ மலரோன்/ அச்சுதன்/ சம்பு/ போற்றும்/

பதா3/ நீது3/ தா3ஸ/-அனுதா3ஸுடே3/ (தல்லி)
திருவடியினளே/ உனது/ தொண்டருக்கு/ தொண்டனம்மா/


சரணம் 2
தே3வி/ நீது3/ ஸரி/ ஸமானமு/-எவரு/-அனி/
தேவீ/ உனது/ சரி/ சமானம்/ எவர்/ என/

தே3வ/ ராஜ/ முனுலு/ நின்னு/ பொக333/
தேவர்/ அரசர்கள்/ முனிவர்கள்/ புகழ/

நா/ வெத/ தீ3ர்சி/ பி3ரான/ வராலு/-ஒஸகி3/
எனது/ வேதனைகளை/ தீர்த்து/ விரைவாக/ வரங்கள்/ அருளி/

நன்னு/ ப்3ரோவ/ நீ/ ஜாலமு/-ஏலனே/ (தல்லி)
என்னை/ காப்பதற்கு/ உனது/ தாமதம்/ ஏனம்மா/


சரணம் 3
ஸ்1யாம/ க்ரு2ஷ்ண/ பரிபாலினீ/ ஜனனீ/
சியாம/ கிருஷ்ணனை/ பேணுபவளே/ ஈன்றவளே/

காமித/-அர்த2/ ப்ரதா3/ பங்கஜ/ லோசனீ/
விரும்பிய/ பொருட்களை/ தருபவளே/ பங்கயற்/ கண்ணீ/

கௌமாரீ/ ராணீ/ புராணீ/ பரா/ ஸ1க்தீ/
கௌமாரீ/ ராணீ/ பழம்பொருளே/ பரா/ சக்தீ/

காம/ கோடி/ பீட2/ வாஸினீ/ (தல்லி)
காம/ கோடி/ பீடத்தில்/ உறைபவளே/


குறிப்புக்கள் - (Notes)
வேறுபாடுகள் - (Pathanthara)
1 - பராகு ஸேயகு - பராகு ஸேயக.

2 - ஆத3ரிஞ்சுடகிதி3 - ஆத3ரிஞ்சுடகிதே3.

3 - 3தா3 - கா3தா3.

4 - பதா3 - பாதா3.
Top
5 - நின்னு பொக333 - நினு பொக333.

6 - நா வெத - நா வெத3 : இவ்விடத்தில், 'வெத3' என்பது பொருந்தாது.

7 - காமிதார்த2 ப்ரதா3 பங்கஜ லோசனீ - காமிதார்த2 ப்ரத3 கஞ்ஜ லோசனீ.

10 - காம கோடி பீட2 வாஸினீ - காம கோடி பீட2 நிவாஸினீ - காம கோடி பீடா2தி4 வாஸினீ.
Top

மேற்கோள்கள்
8 - கௌமாரீ - 'ஏழு தாய்மார்கள்' நோக்கவும்.

9 - பரா ஸ1க்தீ - லலிதா ஸஹஸ்ர நாமத்தில், அம்மைக்கு 'பரா', 'பஸ்1யந்தீ', 'மத்4யமா' மற்றும் 'வைக2ரீ' என்று பெயர்கள். இவை யாவும், உடலில், ஒலி தோன்றி, வெளிப்படுவதைக் குறிக்கும். காஞ்சி மாமுனிவரின் விளக்கவுரை (பக்கம் 30) நோக்கவும்.

10 - காம கோடி பீட2 வாஸினீ - லலிதா ஸஹஸ்ர நாமத்தில், அம்மையின் பெயர் (589) 'காம கோடிகா'. காம கோடி பீடம் நோக்கவும்.
Top

விளக்கம்
மலரோன் - பிரமன்
அச்சுதன் - அரி
சம்பு - அரன்
Top


Updated on 11 Jul 2011

Saturday, July 9, 2011

ஸ்யாமா ஸாஸ்த்ரி கிருதி - ஸ்ரீ காமாக்ஷீ - ராகம் கல்யாணி - Sri Kamakshi - Raga Kalyani

பல்லவி
ஸ்ரீ காமாக்ஷீ காவவே நனு கருணா கடாக்ஷி
1ஸ்ரீ காந்திமதீ ஸ்ரீ காஞ்சீ புர வாஸினி

அனுபல்லவி
ஏ(கா)ம்(ரே)ஸ்1வரீ நீகு ஏலாகு33ய வச்சுனோ
லோகுலு கோரின தை3வமு நீவே கா3தா3
ஏக பா4வுடை3ன நன்(னொ)கனி ப்3ரோவ ப3ருவா (ஸ்ரீ)

சரணம்
சரணம் 1
கோரி வச்சின ப4க்த ஜனுலகு
கோம(ளா)ங்கீ3 நீவே ஸாம்ராஜ்யமு
காமா(க்ஷ)ம்மா நின்னே வேடி3ன பி3ட்33னு
காபா(ட3வ)ம்மா கருண ஜூ(ட3வ)ம்மா
ஸாரஸ த3ள நேத்ரீ 2காம பாலினீ
ஸோம ஸே12ருனி ராணீ புராணீ
ஸ்1யாம(ளா)ம்பி3கே காளிகே 3கலே
ஸாம கா3ன மோதி3னீ ஜனனீ (ஸ்ரீ)


சரணம் 2
நீரஜ லோசனா 4ஸ்தி2ர(ம)னி4க்திதோ
நின்னே 51ர(ண)ண்டின தா3ஸுடு3 நேனு
நீ ஸன்னிதி4னி ஜேரின நாபை
6நிரீக்ஷணமு சேய தகு3னா
7நீ நாம த்4யானமே நியதி வேரே
ஜப தபமு(லெ)ருக3னே மா(ய)ம்மா
நீ ஸா(டெ)வரு ஸ்1யாமளே ஸி1வே
ஸ்1யாம க்ரு2ஷ்ண பாலித ஜனனீ (ஸ்ரீ)


ஸ்வர ஸாஹித்ய
நா மனவி வினு(மி)க கி3ரி
தனயா முத3முதோ வச்சி கோரிதி
நா வெதலனு தீ3ர்சவே மா(க)ப4
தா3ன(மீ)யவே தாமஸமு ஸேயகனே (ஸ்ரீ)


பொருள் - சுருக்கம்
  • ஸ்ரீ காமாட்சீ! கருணைக் கடைக்கண்ணீ! ஸ்ரீ காந்திமதீ! ஸ்ரீ காஞ்சீபுரத்தினில் உறைபவளே!
  • ஏகாம்பரேசுவரீ!
  • கோமள அங்கத்தினளே! காமாட்சியம்மா! தாமரையிதழ்க் கண்ணீ! மன்மதனைக் காத்தவளே! பிறை யணிவோனின் ராணியே! பழம் பொருளே! சியாமளா அம்பிகையே! காளிகையே! கலையே! சாம கானத்தினில் மகிழ்பவளே! ஈன்றவளே!
  • கமலக் கண்ணீ! எமது தாயே! சியாமளையே! சிவையே! சியாம கிருஷ்ணனைப் பேணும், ஈன்றவளே!
  • மலை மகளே!

  • காப்பாயம்மா, என்னை.

    • உனக்கு எங்ஙனம் தயை வருமோ?
    • மக்கள் வேண்டும் தெய்வம், நீயே யன்றோ?
    • ஓர் எண்ணத்தினனாகிய என்னொருவனைக் காத்தல் பளுவா?

    • கோரி வந்த அடியார்களுக்கு, நீயே பேரரசாகும்.
    • உன்னையே வேண்டிய குழந்தையாம் (நான்).
    • காப்பாயம்மா.
    • கருணை புரிவாயம்மா.

    • திரமென, பக்தியுடன், உன்னை சரணம் அண்டிய, தொண்டன் நான்.
    • உனது சன்னிதியினை அடைந்த என்னிடம், புறக்கணிப்பு செய்தல் தகுமா?
    • உனது நாம தியானமே, நியதியாம், எனக்கு.
    • வேறே ஜப, தவங்கள் அறியேனம்மா.
    • உனது நிகர் எவர்?

    • எனது வேண்டுகொளினைக் கேளாய், இனி.
    • மகிழ்வுடன் வந்து, வேண்டினேன்.
    • எனது வேதனைகளைத் தீர்ப்பாயம்மா.
    • எமக்கு அபய தானம் தருவாயம்மா, தாமதம் செய்யாமலே.


  • காப்பாயம்மா, என்னை.



பதம் பிரித்தல் - பொருள்
பல்லவி
ஸ்ரீ/ காமாக்ஷீ/ காவவே/ நனு/ கருணா/ கடாக்ஷி/
ஸ்ரீ/ காமாட்சீ/ காப்பாயம்மா/ என்னை/ கருணை/ கடைக்கண்ணீ/

ஸ்ரீ/ காந்திமதீ/ ஸ்ரீ/ காஞ்சீ/ புர/ வாஸினி/
ஸ்ரீ/ காந்திமதீ/ ஸ்ரீ/ காஞ்சீ/ புரத்தினில்/ உறைபவளே/


அனுபல்லவி
ஏக-ஆம்ர-ஈஸ்1வரீ/ நீகு/ ஏலாகு3/ த3ய/ வச்சுனோ/
ஏகாம்பரேசுவரீ/ உனக்கு/ எங்ஙனம்/ தயை/ வருமோ/

லோகுலு/ கோரின/ தை3வமு/ நீவே/ கா3தா3/
மக்கள்/ வேண்டும்/ தெய்வம்/ நீயே/ யன்றோ/

ஏக/ பா4வுடை3ன/ நன்னு/-ஒகனி/ ப்3ரோவ/ ப3ருவா/ (ஸ்ரீ)
ஓர்/ எண்ணத்தினனாகிய/ என்/ ஒருவனை/ காத்தல்/ பளுவா/


சரணம்
சரணம் 1
கோரி/ வச்சின/ ப4க்த ஜனுலகு/
கோரி/ வந்த/ அடியார்களுக்கு,

கோமள/-அங்கீ3/ நீவே/ ஸாம்ராஜ்யமு/
கோமள/ அங்கத்தினளே/ நீயே/ பேரரசாகும்/

காமாக்ஷி/-அம்மா/ நின்னே/ வேடி3ன/ பி3ட்33னு/
காமாட்சி/ யம்மா/ உன்னையே/ வேண்டிய/ குழந்தையாம் (நான்)/

காபாடு3/-அம்மா/ கருண/ ஜூடு3/-அம்மா/
காப்பாய்/ அம்மா/ கருணை/ புரிவாய்/ அம்மா/

ஸாரஸ/ த3ள/ நேத்ரீ/ காம/ பாலினீ/
தாமரை/ யிதழ்/ கண்ணீ/ மன்மதனை/ காத்தவளே/

ஸோம/ ஸே12ருனி/ ராணீ/ புராணீ/
பிறை/ யணிவோனின்/ ராணியே/ பழம் பொருளே/

ஸ்1யாமளா/-அம்பி3கே/ காளிகே/ கலே/
சியாமளா/ அம்பிகையே/ காளிகையே/ கலையே/

ஸாம/ கா3ன/ மோதி3னீ/ ஜனனீ/ (ஸ்ரீ)
சாம/ கானத்தினில்/ மகிழ்பவளே/ ஈன்றவளே/


சரணம் 2
நீரஜ/ லோசனா/ ஸ்தி2ரமு/-அனி/ ப4க்திதோ/
கமல/ கண்ணீ/ திரம்/ என/ பக்தியுடன்/

நின்னே/ ஸ1ரணு/-அண்டின/ தா3ஸுடு3/ நேனு/
உன்னை/ சரணம்/ அண்டிய/ தொண்டன்/ நான்/

நீ/ ஸன்னிதி4னி/ ஜேரின/ நாபை/
உனது/ சன்னிதியினை/ அடைந்த/ என்னிடம்/

நிரீக்ஷணமு/ சேய/ தகு3னா/
புறக்கணிப்பு/ செய்தல்/ தகுமா/

நீ/ நாம/ த்4யானமே/ நியதி/ வேரே/
உனது/ நாம/ தியானமே/ நியதியாம் (எனக்கு)/ வேறே/

ஜப/ தபமுலு/-எருக3னே/ மா/-அம்மா/
ஜப/ தவங்கள்/ அறியேனம்மா/ எமது/ தாயே/

நீ/ ஸாடி/-எவரு/ ஸ்1யாமளே/ ஸி1வே/
உனது/ நிகர்/ எவர்/ சியாமளையே/ சிவையே/

ஸ்1யாம/ க்ரு2ஷ்ண/ பாலித/ ஜனனீ/ (ஸ்ரீ)
சியாம/ கிருஷ்ணனை/ பேணும்/ ஈன்றவளே/


ஸ்வர ஸாஹித்ய
நா/ மனவி/ வினுமு/-இக/ கி3ரி/
எனது/ வேண்டுகொளினை/ கேளாய்/ இனி/ மலை/

தனயா/ முத3முதோ/ வச்சி/ கோரிதி/
மகளே/ மகிழ்வுடன்/ வந்து/ வேண்டினேன்/

நா/ வெதலனு/ தீ3ர்சவே/ மாகு/-அப4ய/
எனது/ வேதனைகளை/ தீர்ப்பாயம்மா/ எமக்கு/ அபய/

தா3னமு/-ஈயவே/ தாமஸமு/ ஸேயகனே/ (ஸ்ரீ)
தானம்/ தருவாயம்மா/ தாமதம்/ செய்யாமலே/


குறிப்புக்கள் - (Notes)
வேறுபாடுகள் - (Pathanthara)
4 - ஸ்தி2ரமனி - இங்ஙனமே எல்லா புத்தகங்களிலும் கொடுக்கப்பட்டுள்ளது. ஆனால், இதற்கு, 'திரமான' என்று பொருள் கொள்ளப்பட்டுள்ளது. எனவே, இது, 'ஸ்தி2ரமைன' என்றிருக்கவேண்டுமென நான் கருதுகின்றேன்.

5 - 1ரணண்டின - இங்ஙனமே எல்லா புத்தகங்களிலும் கொடுக்கப்பட்டுள்ளது. ஆனால், இதற்கு, 'சரணடைந்த' என்று பொருள் கொள்ளப்பட்டுள்ளது. எனவே, இது, 'ஸ1ரணனின' என்றிருக்கவேண்டுமென நான் கருதுகின்றேன்.

6 - நிரீக்ஷணமு சேய - இங்ஙனமே எல்லா புத்தகங்களிலும் கொடுக்கப்பட்டுள்ளது. ஆனால், இதற்கு, 'புறக்கணிப்பு செய்ய' என்று பொருள் கொள்ளப்பட்டுள்ளது. 'ஈக்ஷண' என்ற சம்ஸ்கிருத சொல்லுக்கு, 'நோக்குதல்' என்று பொருளாகும். இச்சொல்லுடன், 'நிர்' என்ற prefix-இனை சேர்த்து, 'நோக்காதிருத்தல்' என்று பொருள்கொள்ளப்பட்டிருக்கலாம். பொதுவாக, சம்ஸ்கிருதத்தில், 'நிர்' என்ற prefix, அந்த சொல்லினை, எதிர்மறையாக்கும். ஆனால், 'ஈக்ஷண' என்ற சொல்லுடன், 'நிர்' கூட்டி, 'நிரீக்ஷண' என்றாலும், 'நோக்குதல்' என்றே பொருளாகும். இவ்விடத்தில், 'புறக்கணித்தல்' என்பதற்கு, சில சொற்களாவன - 'நிரீஹத', 'நிர்-லக்ஷ்ய' (அலக்ஷ்ய), 'உபேக்ஷ' ஆகும்.

7 - நீ நாம த்4யானமே - நீ நாமமே த்4யானமே.
Top

மேற்கோள்கள்
1 - ஸ்ரீ காந்திமதீ - திருநெல்வேலியில், அம்மையின் பெயர். இப்பாடல், காஞ்சீபுரத்திலுள்ள 'காமாட்சி'யை நோக்கி பாடப்பட்டுள்ளதால், 'காந்திமதீ' என்ற சொல்லுக்கு 'பேரொளியினள்' என்று பொருளாகும்.

2 - காம பாலினீ - மன்மதனைக் காத்தவள். சிவன், மன்மதளை எரித்து சாம்பலாக்கிய பின்னர், காமாட்சி, அவனை, உடலின்றி உயிர்ப்பித்ததாகக் கூறப்படும். இது குறித்து, 'ஸௌந்தர்ய லஹரி' (6-வது செய்யுள்) நோக்கவும்.

3 - கலே - கலையே - 'கலை வடிவினளே' என. லலிதா ஸஹஸ்ர நாமத்தினில், அம்மையின் பெயர் 'சதுஷ்-ஷஷ்டி-கலாமயீ' (226) (64 கலை வடிவினள்) ஆகும். '64 கலைகள்' பற்றிய விவரம்.
Top

விளக்கம்
ஏகாம்பரேசுவரீ - காஞ்சி ஏகாம்பரேசுவரரின் இல்லாள்
ஓர் எண்ணத்தினன் - அம்மையைத் தவிர வேறு எண்ணமற்றவன்
பிறை யணிவோன் - சிவன்
Top


Updated on 10 Jul 2011

Thursday, July 7, 2011

ஸ்யாமா ஸாஸ்த்ரி கிருதி - ஸ1ங்கரி ஸ1ங்கரி - ராகம் கல்யாணி - Sankari Sankari - Raga Kalyani

பல்லவி
1ங்கரி ஸ1ங்கரி கருணா-கரி ராஜ
ராஜேஸ்1வரி ஸுந்த3ரி பராத்பரி கௌ3ரி

அனுபல்லவி
பங்கஜ த3ள நேத்ரி கி3ரி ராஜ குமாரி
பரம பாவனி ப4வானி ஸதா3-ஸி1வ குடும்பி3னி (ஸ1ங்கரி)

சரணம்
ஸ்1யாம க்ரு2ஷ்ண ஸோத3ரி ஸி1ஸு1ம் மாம் பரிபாலய ஸ1ங்கரி
கரி முக2 குமார ஜனனி காத்யாயனி கல்யாணி
1ஸர்வ சித்த போ3தி4னி 2தத்வ ஞான ரூபிணி
3ஸர்வ லோகாய தி31 மங்க3ளம் ஜய மங்க3ளம்
ஸு14 மங்க3ளம் (ஸ1ங்கரி)


பொருள் - சுருக்கம்
  • சங்கரீ! கருணையுடையவளே! ராஜ ராஜேசுவரீ! சுந்தரீ! பராபரீ! கௌரீ!
  • தாமரையிதழ்க் கண்ணீ! மலையரசன் மகளே! முற்றிலும் தூயவளே! பவானீ! சதா-சிவனின் இல்லாளே!
  • சியாம கிருஷ்ணனின் சோதரியே! சங்கரீ! யானை முகத்தோன், முருகனை ஈன்றவளே! காத்தியாயனீ! கல்யாணீ! அனைவரின் உள்ளம் அறிந்தவளே! தத்துவங்கள் மற்றும் அறிவு வடிவினளே!

    • உனது குழந்தை நான்.
    • பேணுவாய்.
    • அனைத்துலகோருக்கும் அருள்வாய், மங்களம், ஜய மங்களம், நன் மங்களம்



பதம் பிரித்தல் - பொருள்
பல்லவி
1ங்கரி/ ஸ1ங்கரி/ கருணா-கரி/ ராஜ/
சங்கரீ/ சங்கரீ/ கருணையுடையவளே/ ராஜ/

ராஜேஸ்1வரி/ ஸுந்த3ரி/ பராத்பரி/ கௌ3ரி/
ராஜேசுவரீ/ சுந்தரீ/ பராபரீ/ கௌரீ/


அனுபல்லவி
பங்கஜ/ த3ள/ நேத்ரி/ கி3ரி/ ராஜ/ குமாரி/
தாமரை/ யிதழ்/ கண்ணீ/ மலை/ யரசன்/ மகளே/

பரம/ பாவனி/ ப4வானி/ ஸதா3/-ஸி1வ/ குடும்பி3னி/ (ஸ1ங்கரி)
முற்றிலும்/ தூயவளே/ பவானீ/ சதா/-சிவனின்/ இல்லாளே/


சரணம்
ஸ்1யாம/ க்ரு2ஷ்ண/ ஸோத3ரி/ ஸி1ஸு1ம்/ மாம்/ பரிபாலய/ ஸ1ங்கரி/
சியாம/ கிருஷ்ணனின்/ சோதரியே/ (உனது) குழந்தை/ நான்/ பேணுவாய்/ சங்கரீ/

கரி/ முக2/ குமார/ ஜனனி/ காத்யாயனி/ கல்யாணி/
யானை/ முகத்தோன்/ முருகனை/ ஈன்றவளே/ காத்தியாயனீ/ கல்யாணீ/

ஸர்வ/ சித்த/ போ3தி4னி/ தத்வ/ ஞான/ ரூபிணி/
அனைவரின்/ உள்ளம்/ அறிந்தவளே/ தத்துவங்கள்/ (மற்றும்) அறிவு/ வடிவினளே/

ஸர்வ/ லோகாய/ தி31/ மங்க3ளம்/ ஜய/ மங்க3ளம்/
அனைத்து/ உலகோருக்கும்/ அருள்வாய்/ மங்களம்/ ஜய/ மங்களம்/

ஸு14/ மங்க3ளம்/ (ஸ1ங்கரி)
நன்/ மங்களம்/


குறிப்புக்கள் - (Notes)
வேறுபாடுகள் - (Pathanthara)
3 - ஸர்வ லோகாய தி31 - ஸர்வ லோகாதீ3ஸே1 : புத்தகங்களில், இதற்கு, 'அனத்துலகோருக்கும் (மங்களம்) அருள்வாய்' என்று பொருள் கொள்ளப்பட்டுள்ளது. சரணத்தின் முதல் வரியில், 'குழந்தையாகிய என்னைப் பேணுவாய்' என்று கூறப்பட்டுள்ளது. எனவே, இப்பாடல், அம்மைக்கு மங்களம் பாடுவதாக அமையவில்லை. எனவே, 'ஸர்வ லோகாதீ3ஸே1' (அனைத்துலகத் தலைவியே) என்பது தவறாகும்.
Top

மேற்கோள்கள்

விளக்கம்
1 - ஸர்வ சித்த போ3தி4னி - உள்ளம் அறிந்தவள் - 'உள்ளத்தினை ஒளிர்விப்பவள்' என்றும் கொள்ளலாம்.

2 - தத்வ ஞான ரூபிணி - தத்துவங்கள் மற்றும் அறிவு வடிவினள் - 'மெய்யறிவு வடிவினள்' என்றும் கொள்ளலாம்.

யானை முகத்தோன் - விநாயகன்
Top


Updated on 07 Jul 2011

Tuesday, July 5, 2011

ஸ்யாமா ஸாஸ்த்ரி கிருதி - ராவே பர்வத ராஜ - ராகம் கல்யாணி - Raave Parvata Raja - Raga Kalyani

பல்லவி
ராவே பர்வத ராஜ குமாரீ
தே3வீ நன்னு ப்3ரோசுடகு வேவேக3மே (ராவே)

அனுபல்லவி
நீவே க3தி(ய)னி நம்மி(யு)ண்டி கா3தா3
1நே மொர(லி)ட3கா3 ஜெப்(பவ)ம்மா மா தல்லி (ராவே)

சரணம்
சரணம் 1
தீ4ர குமார வந்தி3த பதா3
நீரத3 வேணீ த்ரி-லோக ஜனனி நீவு க3தா3
நார(தா3)தி3 நுத ஸு14 சரிதா
உதா3ர கு3ணவதீ ப(தா3)ப்3ஜமுலே ஸ1ர(ண)ண்டி (ராவே)


சரணம் 2
மீன லோசனீ க்ரு2ப ஜூ(ட3வ)ம்மா
தீ3ன ரக்ஷகி(ய)னி பி3ருது3 நீகு தகு3
தா3னவ ரிபு தோஷிணி புராணீ அப4
தா3ன(மீ)யவே ஸ்1யாம க்ரு2ஷ்ண ஸோத3ரீ (ராவே)


பொருள் - சுருக்கம்
  • மலையரசன் மகளே! தேவீ!
  • எமது தாயே!
  • தீரன், முருகன் தொழும் திருவடியினளே! கார் குழலியே! நாரதர் முதலானோர் போற்றும் நற்சரிதத்தினளே! உதார குணவதியே!
  • அங்கயற் கண்ணியே! அசுரர் பகைவருக்கு மகிழ்வளிப்பவளே! பழம்பொருளே! சியாம கிருஷ்ணன் சோதரியே!

  • வாராயம்மா. என்னைக் காப்பதற்கு, வெகு விரைவாக வாராயம்மா.

    • நீயே கதியென நம்பியிருந்தேன் அன்றோ?
    • நான் முறைகளிட்டுக்கொண்டிருக்க, சொல்வாயம்மா.

    • மூவுலகினை யீன்றவள் நீயன்றோ?
    • உனது திருவடித் தாமரைகளே சரணமென்றேன்.

    • கிருபை காட்டுவாயம்மா.
    • எளியோரைக் காப்பவளெனும் விருது, உனக்குத் தகும்.
    • அபய தானம் தருவாயம்மா.


  • வாராயம்மா. என்னைக் காப்பதற்கு, வெகு விரைவாக வாராயம்மா.



பதம் பிரித்தல் - பொருள்
பல்லவி
ராவே/ பர்வத/ ராஜ/ குமாரீ/
வாராயம்மா/ மலை/ யரசன்/ மகளே/

தே3வீ/ நன்னு/ ப்3ரோசுடகு/ வேவேக3மே/ (ராவே)
தேவீ/ என்னை/ காப்பதற்கு/ வெகு விரைவாக/ (வாராயம்மா)


அனுபல்லவி
நீவே/ க3தி/-அனி/ நம்மி/-உண்டி/ கா3தா3/
நீயே/ கதி/ யென/ நம்பி/ யிருந்தேன்/ அன்றோ/

நே/ மொரலு/-இட3கா3/ ஜெப்பு/-அம்மா/ மா/ தல்லி/ (ராவே)
நான்/ முறைகள்/ இட்டுக்கொண்டிருக்க/ சொல்வாய்/ அம்மா/ எமது/ தாயே/


சரணம்
சரணம் 1
தீ4ர/ குமார/ வந்தி3த/ பதா3/
தீரன்/ முருகன்/ தொழும்/ திருவடியினளே/

நீரத3/ வேணீ/ த்ரி-லோக/ ஜனனி/ நீவு/ க3தா3/
கார்/ குழலியே/ மூவுலகினை/ யீன்றவள்/ நீ/ யன்றோ/

நாரத3/-ஆதி3/ நுத/ ஸு14/ சரிதா/
நாரதர்/ முதலானோர்/ போற்றும்/ நற்/ சரிதத்தினளே/

உதா3ர/ கு3ணவதீ/ பத3/-அப்3ஜமுலே/ ஸ1ரணு/-அண்டி/ (ராவே)
உதார/ குணவதியே/ உனது/ திருவடி/ தாமரைகளே/ சரணம்/ என்றேன்/


சரணம் 2
மீன/ லோசனீ/ க்ரு2ப/ ஜூடு3/-அம்மா/
(அம்) கயற்/ கண்ணியே/ கிருபை/ காட்டுவாய்/ அம்மா/

தீ3ன/ ரக்ஷகி/-அனி/ பி3ருது3/ நீகு/ தகு3/
எளியோரை/ காப்பவள்/ எனும்/ விருது/ உனக்கு/ தகும்/

தா3னவ/ ரிபு/ தோஷிணி/ புராணீ/ அப4ய/
அசுரர்/ பகைவருக்கு/ மகிழ்வளிப்பவளே/ பழம்பொருளே/ அபய/

தா3னமு/-ஈயவே/ ஸ்1யாம/ க்ரு2ஷ்ண/ ஸோத3ரீ/ (ராவே)
தானம்/ தருவாயம்மா/ சியாம/ கிருஷ்ணன்/ சோதரியே/


குறிப்புக்கள் - (Notes)
வேறுபாடுகள் - (Pathanthara)
1 - நே மொரலிட3கா3 - எல்லா புத்தகங்களிலும், 'நா மொரலிட3கா3' என்று கொடுக்கப்பட்டுள்ளது. ஆனால், 'நான் முறையிடவில்லையா?' என்று பொருள் கொள்ளப்பட்டுள்ளது. எனவே, இவ்விடத்தில், 'நா' (எனது) என்பது தவறாகும். அது, 'நே' (நான்) என்றிருக்கவேண்டும். மேலும், 'நா மொரலிட3கா3' என்பதற்கு, 'எனது முறைகளிட்டுக் கொண்டிருக்க' என்று பொருளாகும். எனவே, 'நே மொரலிட3கா3' (நான் முறைகளிட்டுக் கொண்டிருக்க) என்று இங்கு ஏற்கப்பட்டது.
இவ்விடத்தில், 'நா மொரலிட3கா3' என்பதற்கு பதிலாக, 'நா மொர வினதா3' (எனது முறைகள் கேளாதோ) என்றோ, அல்லது, 'நா மொர வினவா' (எனது முறைகளைக் கேளாயோ) என்றிருந்தாலும் பொருந்தும். ஆனால், எதுகை-மோனையின்படி, இந்த வரியின் இரண்டாவது எழுத்தாக, 'வ' இருக்கவேண்டும் என்று நான் கருதுகின்றேன்.
Top

மேற்கோள்கள்

விளக்கம்
அங்கயற் கண்ணி - மதுரை மீனாட்சி
அசுரர் பகைவர் - வானோர்.
Top


Updated on 06 Jul 2011

ஸ்யாமா ஸாஸ்த்ரி கிருதி - பராமுகம் - ராகம் கல்யாணி - Paraamukham - Raga Kalyani

பல்லவி
பராமுக(மே)(ன)ம்மா பார்வதி(ய)ம்மா

அனுபல்லவி
1பராத்பரீ பரம பாவனீ பவானீ அம்பா
பாரில் நான் உன்னையே நம்பினேன் (பரா)

சரணம்
சரணம் 1
2அகில(மெ)ங்கும் நிறைந்த ஜோதியே அம்பிகையே
அன்னையே இனி நான் தாளே(னெ)னச்-சொன்னேன் (பரா)


சரணம் 2
உனது பாத(மி)ன்றி வேறு துணை-யுண்டோ
உந்தன் மன(மி)ரங்கவும் நான் சொல்லவோ (பரா)


சரணம் 3
3ஸ்1யாம க்ரு2ஷ்ண சோதரீ க்ரு2பா-கரீ
சரணம் சரண(மெ)ன்று சொன்னேன் தாயே (பரா)


பொருள் - சுருக்கம்
  • பார்வதியம்மா!
  • பராபரீ! முற்றிலும் தூயவளே! பவானீ! அம்பையே!
  • அகிலமெங்கும் நிறைந்த ஜோதியே! அம்பிகையே! அன்னையே!
  • சியாம கிருஷ்ண சோதரீ! கிருபாகரீ! தாயே!

  • பராமுகமேனம்மா?

    • பாரில் நான் உன்னையே நம்பினேன்.
    • இனி, நான் தாளேன் எனச்சொன்னேன்.

    • உனது பாதம் இன்றி, வேறு துணையுண்டோ?
    • உந்தன் மனமிரங்கவும் நான் சொல்லவோ?

    • சரணம் சரணமென்று சொன்னேன்.


  • பராமுகமேனம்மா?



பதம் பிரித்தல் - பொருள்
பல்லவி
பராமுகம்-ஏன்-அம்மா பார்வதி-அம்மா


அனுபல்லவி
பராத்பரீ/ பரம/ பாவனீ/ பவானீ/ அம்பா/
பராபரீ/ முற்றிலும்/ தூயவளே/ பவானீ/ அம்பையே/

பாரில் நான் உன்னையே நம்பினேன் (பரா)


சரணம்
அகிலம்-எங்கும் நிறைந்த ஜோதியே அம்பிகையே

அன்னையே இனி நான் தாளேன்-என-சொன்னேன் (பரா)


சரணம் 2
உனது பாதம்-இன்றி வேறு துணை-உண்டோ

உந்தன் மனம்-இரங்கவும் நான் சொல்லவோ (பரா)


சரணம் 3
ஸ்1யாம/ க்ரு2ஷ்ண/ சோதரீ/ க்ரு2பா-கரீ/
சியாம/ கிருஷ்ண/ சோதரீ/ கிருபாகரீ/

சரணம் சரணம்-என்று சொன்னேன் தாயே (பரா)


குறிப்புக்கள் - (Notes)
வேறுபாடுகள் - (Pathanthara)
3 - ஸ்1யாம க்ரு2ஷ்ண சோதரீ - ஸ்1யாம க்ரு2ஷ்ணன் சோதரீ.
Top

மேற்கோள்கள்
1 - பராத்பரீ - பராபரீ - பரத்திற்கும் அப்பாற்பட்டவள். கீழ்க்காணும், 'ஜோதி' பற்றிய குறிப்பினை நோக்கவும்.

2 - அகிலமெங்கும் நிறைந்த ஜோதியே - கீதையில், கண்ணன், பரம்பொருளினைப் பற்றி கூறுவது -

"ஒளிகளுக்கெல்லாம் அஃது ஒளியாம் - இருட்டினுக்கும் அப்பாற்பட்டதெனப்படும்". (13.17)

இருட்டினுக்கப்பாற்பட்டது - ஏனெனில் அது நிழலுமற்றது. 'பரம்பொருள்'.
Top

விளக்கம்



Updated on 05 Jul 2011

Sunday, July 3, 2011

ஸ்யாமா ஸாஸ்த்ரி கிருதி - நீவே க3தியனி - ராகம் கல்யாணி - Nive Gatiyani - Raga Kalyani

பல்லவி
நீவே க3தி(ய)னி நெர நம்மினானு ஜக3(த3)ம்பா3
நீ(வ)னாத2 ரக்ஷகி மா(ய)ம்மா

அனுபல்லவி
ராவே வேக3மே மனவி வி(ன)ம்மா ஸ்ரீ
ராஜ ரா(ஜே)ஸ்1வரீ தே3வீ (நீவே)

சரணம்
1காம கோடி பீட2 நிவாஸினி கல்யாணீ
ஸ்1யாம க்ரு2ஷ்ண ஸோத3ரீ தே3வீ
நீது3 சரிதமு வினி வினி பாத3 கமலமுனு
கோரிதினி ஸதா33தி(ய)னி
பொக3டி3 பொக3டி3 2சரணமு கொ3லிசே(ன)ம்மா
3ங்கா3ரு காமாக்ஷி (நீவே)


பொருள் - சுருக்கம்
  • பல்லுலகத் தாயே! எமதம்மா!
  • ஸ்ரீ ராஜ ராஜேசுவரீ! தேவீ!
  • காம கோடி பீடத்தினில் உறைபவளே! கல்யாணீ! சியாம கிருஷ்ணனின் சோதரியே! தேவீ! பங்காரு காமாட்சீ!

    • நீயே கதியென மிக்கு நம்பினேன்.
    • நீ அனாதைகளைக் காப்பவள்.

    • வாராயம்மா, விரைவாக; வேண்டுகோளினைக் கேளாயம்மா.
    • உனது சரிதத்தினைக் கேட்டுக் கேட்டு, உனது திருவடிக் கமலத்தினைக் கோரினேன்.
    • எவ்வமயமும், கதியென, புகழ்ந்து புகழ்ந்து, உனது திருவடியினை வணங்கினேனம்மா.



பதம் பிரித்தல் - பொருள்
பல்லவி
நீவே க3தி-அனி நெர நம்மினானு ஜக3த்-அம்பா3
நீயே கதியென மிக்கு நம்பினேன். பல்லுலகத் தாயே!

நீவு/-அனாத2/ ரக்ஷகி/ மா/-அம்மா/
நீ/ அனாதைகளை/ காப்பவள்/ எமது/ அம்மா/


அனுபல்லவி
ராவே/ வேக3மே/ மனவி/ வினு/-அம்மா/ ஸ்ரீ/
வாராயம்மா/ விரைவாக/ வேண்டுகோளினை/ கேளாய்/ அம்மா/ ஸ்ரீ/

ராஜ/ ராஜ-ஈஸ்1வரீ/ தே3வீ/ (நீவே)
ராஜ/ ராஜேசுவரீ/ தேவீ/


சரணம்
காம/ கோடி/ பீட2/ நிவாஸினி/ கல்யாணீ/
காம/ கோடி/ பீடத்தினில்/ உறைபவளே/ கல்யாணீ/

ஸ்1யாம/ க்ரு2ஷ்ண/ ஸோத3ரீ/ தே3வீ/
சியாம/ கிருஷ்ணனின்/ சோதரியே/ தேவீ/

நீது3/ சரிதமு/ வினி/ வினி/ பாத3/ கமலமுனு/
உனது/ சரிதத்தினை/ கேட்டு/ கேட்டு/ (உனது) திருவடி/ கமலத்தினை/

கோரிதினி/ ஸதா3/ க3தி/-அனி/
கோரினேன்/ எவ்வமயமும்/ கதியென/

பொக3டி3/ பொக3டி3/ சரணமு/ கொ3லிசேனு/-அம்மா/
புகழ்ந்து/ புகழ்ந்து/ (உனது) திருவடியினை/ வணங்கினேன்/ அம்மா/

3ங்கா3ரு/ காமாக்ஷி/ (நீவே)
பங்காரு/ காமாட்சீ/


குறிப்புக்கள் - (Notes)
வேறுபாடுகள் - (Pathanthara)
2 - சரணமு கொ3லிசேனம்மா - எல்லா புத்தகங்களிலும், 'ஸ1ரணமு கொ3லிசேனம்மா' என்று கொடுக்கப்பட்டுள்ளது. அதற்கு, 'சரணமடைந்தேன்' என்று பொருள் கொள்ளப்பட்டுள்ளது. 'கொ3லுசு' (கொலுசு) என்ற சொல்லுக்கு, 'சேவித்தல்', 'வணங்குதல்' என்றுதான் பொருள்கள் உண்டு. இதற்கு முன் வரியினில், 'பாத3 கமலமுனு கோரிதினி' (திருவடிக் கமலத்தினைக் கோரினேன்) என்று கொடுக்கப்பட்டுள்ளது. அதன்படியே, இங்கும் 'திருவடியினை வணங்கினேன் (சேவித்தேன்)' என்று பொருள் கொள்ளவேண்டும் என்று நான் கருதுகின்றேன். எனவே, இங்கு, 'சரணமு' (திருவடி) என்றிருக்க வேண்டும் - 'ஸ1ரணமு' (புகல்) என்றல்ல. அங்ஙனமே இங்கு ஏற்கப்பட்டது.
Top

மேற்கோள்கள்
1 - காம கோடி பீட2 நிவாஸினி - லலிதா ஸஹஸ்ர நாமத்தில் (589) அம்மையின் பெயர் 'காம கோடிகா' - காம கோடி பீடம்.
Top

விளக்கம்



Updated on 04 Jul 2011

ஸ்யாமா ஸாஸ்த்ரி கிருதி - ஹிமாத்3ரி ஸுதே - ராகம் கல்யாணி - Himadri Sute - Raga Kalyani

பல்லவி
ஹி(மா)த்3ரி ஸுதே பாஹி மாம் வரதே3 பர தே3வதே

அனுபல்லவி
1ஸுமேரு மத்4ய வாஸினி ஸ்ரீ காமாக்ஷி (ஹிமாத்3ரி)

சரணம்
சரணம் 1
2ஹேம கா3த்ரி பங்கஜ நேத்ரி 3மதங்(கா3)த்மஜே
ஸரோஜ ப4வ ஹ(ரீ)ஸ1 4ஸுர மு(னீ)ந்த்3ர நுதே (ஹிமாத்3ரி)


சரணம் 2
அம்பு3(ஜா)ரி நிப4 வத3னே 5மௌக்திக மணி
ஹார
ஸோ14மான க3ளே ப4க்த கல்ப லதே (ஹிமாத்3ரி)


சரணம் 3
ஸ்1யாம க்ரு2ஷ்ண ஸோத3ரி கௌ3ரி பர(மே)ஸ்1வரி
6கி3ரிஜே நீல வேணி கீர வாணி ஸ்ரீ லலிதே (ஹிமாத்3ரி)


பொருள் - சுருக்கம்
  • பனிமலை மகளே! வரமருள்பவளே! பரதேவதையே!
  • உயர் மேரு நடுவில் உறைபவளே! ஸ்ரீ காமாட்சீ!
  • பொன்னங்கத்தினளே! கமலக்கண்ணீ! மதங்கருக்குப் பிறந்தவளே! தாமரையில் உறைவோன், அரி, ஈசன், வானோர், முனிவரிற் சிறந்தோரால் போற்றப்பெற்றவளே!
  • கமலப் பகை நிகர் வதனத்தினளே! முத்து, மணி மாலைகள் திகழும் கழுத்தினளே! தொண்டரின் கற்பகக் கொடியே!
  • சியாம கிருஷ்ணனின் சோதரியே! கௌரீ! பரமேசுவரீ! மலைத் தோன்றலே! கார் குழலியே! கிளிக் குரலினளே! ஸ்ரீ லலிதையே!

    • காப்பாயென்னை.



பதம் பிரித்தல் - பொருள்
பல்லவி
ஹிம/-அத்3ரி/ ஸுதே/ பாஹி/ மாம்/ வரதே3/ பர/ தே3வதே/
பனி/ மலை/ மகளே/ காப்பாய்/ என்னை/ வரமருள்பவளே/ பரதேவதையே/


அனுபல்லவி
ஸுமேரு/ மத்4ய/ வாஸினி/ ஸ்ரீ/ காமாக்ஷி/ (ஹிமாத்3ரி)
உயர் மேரு/ நடுவில்/ உறைபவளே/ ஸ்ரீ/ காமாட்சீ/


சரணம்
சரணம் 1
ஹேம/ கா3த்ரி/ பங்கஜ/ நேத்ரி/ மதங்க3/-ஆத்மஜே/
பொன்/ அங்கத்தினளே/ கமல/ கண்ணீ/ மதங்கருக்கு/ பிறந்தவளே/

ஸரோஜ/ ப4வ/ ஹரி/-ஈஸ1/ ஸுர/ முனி/-இந்த்3ர/ நுதே/ (ஹிமாத்3ரி)
தாமரையில்/ உறைவோன்/ அரி/ ஈசன்/ வானோர்/ முனிவரிற்/ சிறந்தோரால்/ போற்றப்பெற்றவளே/


சரணம் 2
அம்பு3ஜ/-அரி/ நிப4/ வத3னே/ மௌக்திக/ மணி/
கமல/ பகை/ நிகர்/ வதனத்தினளே/ முத்து/ மணி/

ஹார/ ஸோ14மான/ க3ளே/ ப4க்த/ கல்ப/ லதே/ (ஹிமாத்3ரி)
மாலைகள்/ திகழும்/ கழுத்தினளே/ தொண்டரின்/ கற்பக/ கொடியே/


சரணம் 3
ஸ்1யாம/ க்ரு2ஷ்ண/ ஸோத3ரி/ கௌ3ரி/ பரம-ஈஸ்1வரி/
சியாம/ கிருஷ்ணனின்/ சோதரியே/ கௌரீ/ பரமேசுவரீ/

கி3ரிஜே/ நீல/ வேணி/ கீர/ வாணி/ ஸ்ரீ/ லலிதே/ (ஹிமாத்3ரி)
மலைத் தோன்றலே/ கார்/ குழலியே/ கிளி/ குரலினளே/ ஸ்ரீ/ லலிதையே/


குறிப்புக்கள் - (Notes)
வேறுபாடுகள் - (Pathanthara)
6 - கி3ரிஜே - கி3ரிஜா - கி3ரி ஜால : புத்தகங்களில், இதற்கு, 'மலை மகள்' என்று பொருள் கொள்ளப்பட்டுள்ளது. எனவே, 'கி3ரிஜே' அல்லது 'கி3ரிஜா' என்பதே பொருந்தும். மேலும், 'கி3ரி ஜால' என்பதற்கு, தனிப்பட்டோ அல்லது முன், பின் இணைத்தோ, பொருள் ஏதும் கொள்வதற்கில்லை. எனவே, அது தவறாகும்.
Top

மேற்கோள்கள்
1 - ஸுமேரு மத்4ய வாஸினி - லலிதா ஸஹஸ்ர நாமத்தில் (55) அம்மையின் பெயர் 'ஸுமேரு மத்4ய ஸ்1ரு2ங்க3ஸ்தா4' என்பதாகும்.

2 - ஹேம கா3த்ரி - பொன்னங்கத்தினள் - இது தஞ்சாவூரில் உள்ள 'பங்காரு காமாட்சி'யினைக் குறிக்கும்.

3 - மதங்கா3த்மஜே - மதங்க முனிவரின் மகள். கவி காளிதாசர், தமது 'சியாமளா தண்டக'த்தினில், அம்மையை, 'மாதங்க3 தனயே' என்று அழைக்கின்றார்.
Top

4 - முனீந்த்3ர நுதே - முனிவரிற் சிறந்தோரால் போற்றப்பெற்றவள். இது, அகத்தியரைக் குறிக்கலாம். அகத்தியருக்கு, விஷ்ணுவின் அவதாரமாகிய, ஹயக்ரீவர், லலிதா ஸஹஸ்ர நாமத்தினை உபதேசித்தார். மேற்படி ஸஹஸ்ர நாமத்தின், பூர்வ பாகம் நோக்கவும்.
இது, 'க்ரோத44ட்டாரக' என்றழைக்கப்படும் 'தூ3ர்வாச முனிவரை'யும் குறிக்கலாம். தூ3ர்வாச முனிவரைப் பற்றி மேற்கொண்டு விவரங்கள் அறிய 'ஸ்ரீ வித்3யா உபாகசகர்கள்' நோக்கவும்.
Top

விளக்கம்
4 - ஸுர முனீந்த்3ர நுதே - இவ்விடத்தில், 'இந்த்3ர' என்ற சொல், 'ஸுர' மற்றும் 'முனி' இரண்டுக்கும் பொதுவாகவும் கொள்ளலாம் - 'ஸுரேந்த்3ர' என்றும் 'முனீந்த்3ர' என்றும்.

5 - மௌக்திக மணி ஹார - முத்து, மணி மாலை. இதனை, 'முத்து மாலை'யென்றோ, அல்லது 'முத்து மற்றும் மணி (வைர) மாலை' என்றோ பொருள் கொள்ளலாம். இங்கு பிற்கூறியபடி பொருள் கொள்ளப்பட்டது.

மதங்கர் - மதங்க முனிவர்
தாமரையில் உறைவோன் - பிரமன்
கமலப் பகை - மதி
Top


Updated on 03 Jul 2011