பரா(கே)ல நன்னு பரிபாலிம்ப
மு(ரா)ரி ஸோத3ரி அம்பா3
அனுபல்லவி
நிராத3ரண ஸேயரா(த3)ம்மா ஸி1வே
பரா ஸ1க்தி நா மொர(னா)லகிம்ப (பராகேல)
சரணம்
த4(ரா)(த்3ய)கி2லமுனகு ராணி ஹரி
ஹ(ரா)து3லு பொக3டு3 1பராத்பரி
து3ரந்த4ர மஹி(ஷா)ஸுர த3மனி
ஸ்ம(ரா)தீ4னுடௌ3 ஸ்1யாம க்ரு2ஷ்ண நுதா (பராகேல)
பொருள் - சுருக்கம்
- முராரி சோதரியே! அம்பா!
- சிவையே! பரா சக்தீ!
- புவி முதலாக, அனைத்துலகிற்கும் ராணியே! அரி, அரன் ஆகியோர் புகழும், பராபரீ! மகிடாசுரனை வதைத்த, தலைவியே! மன்மதன் தந்தையாகிய, சியாம கிருஷ்ணனால் போற்றப்பெற்றவளே!
- பராக்கேன், என்னைப் பேணுதற்கு?
- அவமதிப்பு செய்யலாகாதம்மா.
- எனது வேண்டுகோளினைக் கேட்பதற்கு பராக்கேன்?
- பராக்கேன், என்னைப் பேணுதற்கு?
பதம் பிரித்தல் - பொருள்
பல்லவி
பராகு/-ஏல/ நன்னு/ பரிபாலிம்ப/
பராக்கு/ ஏன்/ என்னை/ பேணுதற்கு/
முர/-அரி/ ஸோத3ரி/ அம்பா3/
முரன்/ எதிரி/ சோதரியே/ அம்பா/
அனுபல்லவி
நிராத3ரண/ ஸேயராது3/-அம்மா/ ஸி1வே/
அவமதிப்பு/ செய்யலாகாது/ அம்மா/ சிவையே/
பரா/ ஸ1க்தி/ நா/ மொரனு/-ஆலகிம்ப/ (பராகேல)
பரா/ சக்தீ/ எனது/ வேண்டுகோளினை/ கேட்பதற்கு/ (பராக்கேன்?)
சரணம்
த4ரா/-ஆதி3/-அகி2லமுனகு/ ராணி/ ஹரி/
புவி/ முதலாக/ அனைத்துலகிற்கும்/ ராணியே/ அரி/
ஹர/-ஆது3லு/ பொக3டு3/ பராத்பரி/
அரன்/ ஆகியோர்/ புகழும்/ பராபரீ/
து3ரந்த4ர/ மஹிஷ/-அஸுர/ த3மனி/
தலைவியே/ மகிட/ அசுரனை/ வதைத்த/
ஸ்மர/-ஆதீ4னுடௌ3/ ஸ்1யாம/ க்ரு2ஷ்ண/ நுதா/ (பராகேல)
மன்மதன்/ தந்தையாகிய/ சியாம/ கிருஷ்ணனால்/ போற்றப்பெற்றவளே/
குறிப்புக்கள் - (Notes)
வேறுபாடுகள் - (Pathanthara)
மேற்கோள்கள்
1 - பராத்பரி - பராபரீ - பரத்திற்கும் புறம்பானவள் - இங்கு, 'பரம்' என்பது கீழ்க்கண்ட 'ஈஸா1வஸ்ய உபநிடத'ச் செய்யுளில் கூறப்பெற்ற 'இஃதினை'க் குறிக்கும் -
"ஓம் அஃது பூரணமாம்; இஃது பூரணமாம்; (அந்த) பூரணத்தினின்று, (இந்த) பூரணம் தோன்றும்;
(அந்த) பூரணத்தினின்று, (இந்த) பூரணத்தினை எடுக்க, பூரணமே மிஞ்சும்."
இந்த உபநிடதச் செய்யுளைப் பற்றிய கட்டுரை நோக்கவும்.
Top
விளக்கம்
இந்த கீர்த்தனை ஒரு புத்தகத்தில் மட்டுமே காணப்படுகின்றது - (‘Compositions of Syama Sastry’ – TK Govinda Rao).
முராரி - முரன் என்ற அசுரனி்ன் எதிரி - அரி.
மன்மதன் தந்தை - அரி
Top
Updated on 09 Jun 2011
No comments:
Post a Comment