Showing posts with label Punnaga Varali Raga. Show all posts
Showing posts with label Punnaga Varali Raga. Show all posts

Saturday, April 9, 2011

ஸ்யாமா ஸாஸ்த்ரி கிருதி - கனக ஸை1ல - ராகம் புன்னாக வராளி - Kanaka Saila - Raga Punnaga Varali

பல்லவி
கனக ஸை11விஹாரிணி ஸ்ரீ
காம கோடி பா3லே
ஸுஸீ1லே

அனுபல்லவி
வனஜ ப4வ ஹரி நுதே தே3வி
ஹிம கி3ரிஜே லலிதே ஸததம்
வினதம் மாம் பரிபாலய ஸ1ங்கர
வனிதே 2ஸதி மஹா த்ரிபுர ஸுந்த3ரி (கனக)

சரணம்
சரணம் 1
கம்பு3 கண்டி2 3கஞ்ஜ ஸத்3ரு21 வத3னே
கரி ராஜ க3மனே 4மணி ஸத3னே
51ம்ப3ர விதா3ரி தோஷிணி ஸி1
1ங்கரி ஸதா3 மது4ர பா4ஷிணி (கனக)


சரணம் 2
6சண்ட3 முண்ட32ண்ட3 பண்டி3(தே)க்ஷு
3ண்ட3 கோத3ண்ட3 மண்டி3த பாணி
புண்ட3ரீக 7நய(னா)ர்சித பதே3 த்ரி-
புர வாஸினி
ஸி1வே ஹர விலாஸினி (கனக)


சரணம் 3
ஸ்1யாம(ளா)ம்பி3கே ப4(வா)ப்3தி4 தரணே
8ஸ்1யாம க்ரு2ஷ்ண பரிபாலினி ஜனனி
9காமி(தா)ர்த22ல தா3யிகே
காமாக்ஷி 10ஸகல லோக ஸாக்ஷி (கனக)


பொருள் - சுருக்கம்
  • தங்க மலை உறைபவளே! ஸ்ரீ காம கோடி பாலையே! நற்பண்பினளே!
  • மலரோன், அரி போற்றும், தேவீ! மலை மகளே! லலிதையே! சங்கரன் மனைவி, சதியே! மஹா திரிபுர சுந்தரீ!
  • சங்குக் கழுத்தினளே! தாமரை நிகர் வதனத்தினளே! களிறு அரசன் நடையினளே! (சிந்தா) மணி வீட்டிலிருப்பவளே! காமனை எரித்தோனுக்கு மகிழ்வளிப்பவளே! சிவ சங்கரீ! எவ்வமயும் இன்-சொல்லினளே!
  • சண்ட, முண்டர்களை வதைத்த திறமைசாலியே! கரும்புத் துண்டுக் கோதண்டம் அலங்கரிக்கும், கைகளினளே! புண்டரீக நயனன் அர்ச்சிக்கும், திருவடியுடைய, திரிபுரத்தினில் உறையும், சிவையே! அரனுக்கு இனியவளே!
  • சியாமளா! அம்பிகையே! பிறவிக்கடல் கடத்துவிப்பவளே! சியாம கிருஷ்ணனைப் பேணும், ஈன்றவளே! விரும்பிய பொருட்பயனருளும், காமாட்சீ! அனைத்துலக சாட்சியே!

    • எவ்வமயமும் (உன்னைப்) போற்றும் என்னைக் காப்பாய்.



பதம் பிரித்தல் - பொருள்
பல்லவி
கனக/ ஸை1ல/ விஹாரிணி/ ஸ்ரீ/
தங்க/ மலை/ உறைபவளே/ ஸ்ரீ/

காம/ கோடி/ பா3லே/ ஸுஸீ1லே/
காம/ கோடி/ பாலையே/ நற்பண்பினளே/


அனுபல்லவி
வனஜ ப4வ/ ஹரி/ நுதே/ தே3வி/
மலரோன்/ அரி/ போற்றும்/ தேவீ/

ஹிம/ கி3ரிஜே/ லலிதே/ ஸததம்/
மலை/ மகளே/ லலிதையே/ எவ்வமயமும்/

வினதம்/ மாம்/ பரிபாலய/ ஸ1ங்கர/
(உன்னைப்) போற்றும்/ என்னை/ காப்பாய்/ சங்கரன்/

வனிதே/ ஸதி/ மஹா/ த்ரிபுர/ ஸுந்த3ரி/ (கனக)
மனைவி/ சதியே/ மஹா/ திரிபுர/ சுந்தரீ/


சரணம்
சரணம் 1
கம்பு3/ கண்டி2/ கஞ்ஜ/ ஸத்3ரு21/ வத3னே/
சங்கு/ கழுத்தினளே/ தாமரை/ நிகர்/ வதனத்தினளே/

கரி/ ராஜ/ க3மனே/ மணி/ ஸத3னே/
களிறு/ அரசன்/ நடையினளே/ (சிந்தா) மணி/ வீட்டிலிருப்பவளே/

1ம்ப3ர/ விதா3ரி/ தோஷிணி/ ஸி1வ/
காமனை/ எரித்தோனுக்கு/ மகிழ்வளிப்பவளே/ சிவ/

1ங்கரி/ ஸதா3/ மது4ர/ பா4ஷிணி/ (கனக)
சங்கரீ/ எவ்வமயும்/ இன்/-சொல்லினளே/


சரணம் 2
சண்ட3/ முண்ட3/ க2ண்ட3ன/ பண்டி3தே/-இக்ஷு/
சண்ட/ முண்டர்களை/ வதைத்த/ திறமைசாலியே/ கரும்பு/

3ண்ட3/ கோத3ண்ட3/ மண்டி3த/ பாணி/
துண்டு/ கோதண்டம்/ அலங்கரிக்கும்/ கைகளினளே/

புண்ட3ரீக/ நயன/-அர்சித/ பதே3/
புண்டரீக/ நயனன்/ அர்ச்சிக்கும்/ திருவடியுடைய/

த்ரி-புர/ வாஸினி/ ஸி1வே/ ஹர/ விலாஸினி/ (கனக)
திரிபுரத்தினில்/ உறையும்/ சிவையே/ அரனுக்கு/ இனியவளே/


சரணம் 3
ஸ்1யாமளா/-அம்பி3கே/ ப4வ/-அப்3தி4/ தரணே/
சியாமளா/ அம்பிகையே/ பிறவி/ கடல்/ கடத்துவிப்பவளே/

ஸ்1யாம/ க்ரு2ஷ்ண/ பரிபாலினி/ ஜனனி/
சியாம/ கிருஷ்ணனை/ பேணும்/ ஈன்றவளே/

காமித/-அர்த2/ ப2ல/ தா3யிகே/
விரும்பிய/ பொருட்/ பயன்/ அருளும்/

காமாக்ஷி/ ஸகல/ லோக/ ஸாக்ஷி/ (கனக)
காமாட்சீ/ அனைத்து/ உலக/ சாட்சியே/


குறிப்புக்கள் - (Notes)
வேறுபாடுகள் - (Pathanthara)
1 - விஹாரிணி ஸ்ரீ - விஹாரிணீ ஸ்ரீ - விஹாரிணி அம்ப3 ஸ்ரீ.

3 - கஞ்ஜ ஸத்3ரு21 வத3னே - கஞ்ச ஸத்3ரு21 வத3னே : 'கஞ்ச' என்பது தவறாகும்.

5 - - ஸம்ப3ர விதாரி தோஷிணி - இவ்விடத்தில் 'தோஷிணி' என்ற சொல்லினால் சிவனைத்தான் குறிப்பதாகும். ஆனால் அதற்கு 'ஸம்ப3ராரி விதா3ரி தோஷிணி' என்றிருக்கவேண்டும். ஆனால் எல்லா புத்தகங்களிலும் 'ஸம்ப3ர விதா3ரி தோஷிணி' என்றே கொடுக்கப்பட்டுள்ளது.
5 - - தோஷிணி - தோஷி : 'தோஷி' என்பது தவறாகும்.

6 - சண்ட3 முண்ட32ண்ட3 - சண்ட32ண்ட32ண்ட3ன : 'சண்ட3 முண்ட3' என்பதே சரியாகும்.

7 - நயனார்சித பதே3 த்ரி-புர வாஸினி - நயனார்சித பத3 புர வாஸினி : பிற்கூறியது தவறாகும்.

8 - ஸ்1யாம க்ரு2ஷ்ண பரிபாலினி ஜனனி - ஸ்1யாம க்ரு2ஷ்ண பரிபாலித ஜனனி.

9 - காமிதார்த22ல தா3யிகே - காமிதார்த22ல தா3யகி.

Top

மேற்கோள்கள்
1 - காம கோடி - லலிதா ஸஹஸ்ர நாமத்தில் அம்மையின் பெயர்களிலொன்று - 'காம கோடிகா' (590). ஸ்ரீ கணேசய்யர் அவர்களின் 'ஸ்ரீ லலிதா ஸஹஸ்ர நாமம்' என்ற புத்தகத்தில், "பரப்ரஹ்மமானது சிவசக்தி ஸாமரஸ்ய ரூபமாக இருப்பதனால், அம்பாளை, 'காம கோடிகா' என்று சொல்லப்பட்டது. அம்பாள் வேறு, பரமசிவன் வேறு என்பது கிடையாது என்று தாத்பர்யம்" எனக் கூறப்பட்டுள்ளது.

1 - பா3லே - பாலை - மஹா திரிபுர சுந்தரி் - லலிதா ஸஹஸ்ர நாமத்தில் அம்மையின் பெயர்களிலொன்று 'பா3லா' (965).

4 - மணி ஸத3னே - லலிதா ஸஹஸ்ர நாமத்தில் அம்மையின் பெயர்களிலொன்று 'சிந்தாமணி க்3ரூ2ஹாந்தஸ்தா2' (57) அதாவது 'சிந்தாமணி என்னும் இல்லத்தில் இருப்பவள்'.

7 - த்ரி-புர வாஸினி - லலிதா ஸஹஸ்ர நாமத்தில் அம்மையின் பெயர்களிலொன்று, 'த்ரி-புரா' (626) - மும்மூன்றாக உள்ளவை - குணங்கள் (சத்துவம், ராஜஸம், தாமஸம்), தொழில்கள் (படைத்தல், காத்தல் அழித்தல்) ஆகியவை, 'த்ரி-புரா' எனப்படும்.

Top

விளக்கம்
2 - ஸதி - சதி - இதற்கு, 'மனைவி' என்று பொருள் கொள்ளப்பட்டது. ஆயினும், 'தக்ஷன் மகளாகிய பார்வதி' என்றும் பொருள் கொள்ளலாம்.

5 - 1ம்ப3ர விதா3ரி தோஷிணி - 'ஸ1ம்ப3ர விதா3ரி' என்பதற்கு 'சம்பரனை வதைத்தவன்' அதாவது 'மன்மதன்' என்று பொருளாகும். மன்மதனின் மறுபிறப்பெனப்படும், 'ப்ரத்யும்நன்', 'சம்பரன்' என்னும் அரக்கனை வதைத்த கதை' நோக்கவும். இவ்விடத்தில், அடுத்து வரும், 'தோஷிணி' (மகிழ்விப்பவள்) என்பது 'அம்பாள் சிவனை மகிழ்விப்பதாக'. 'சிவன்', 'மன்மதனுக்கு எதிரி' எனப்படும். அதன்படி, 'ஸ1ம்ப3ர விதா3ரி தோஷிணி' என்பதற்கு 'சிவனை மகிழ்விப்பவள்' என்று பொருளாகாது. ஆனால், எல்லா புத்தகங்களிலும், அப்படிப்பட்ட பொருள் கொள்ளப்பட்டிருப்பதனால், இவ்விடத்தில் ஏதோ ஒரு சொல் விடப்பட்டுள்ளது என்று கருதுகின்றேன். எனக்குத் தெரிந்தவரை, இது, 'ஸ1ம்ப3ர வைரி விதா3ரி தோஷிணி' என்றோ அல்லது 'ஸ1ம்ப3ராரி விதா3ரி தோஷிணி' என்றோ இருக்க வேண்டும்.

10 - ஸகல லோக ஸாக்ஷி - 'லோக' என்ற சொல்லுக்கு, 'உலகம்' என்றும் 'மக்கள்' என்றும் பொருளுண்டு. இவ்விடத்தில், 'அனைத்துலக சாட்சி' என்று பொருள் கொள்ளப்பட்டது, ஆனால், 'அனைத்து சீவன்களிலும், 'அந்தர்யாமி' எனப்படும் 'சாட்சி' என்றும் பொருள் கொள்ளலாம்.

Top

தங்க மலை - மேரு மலை
மலரோன் - பிரமன்
சிந்தாமணி இல்லம் - ஸ்ரீ வித்யா நோக்கவும்
புண்டரீக நயனன் - அரி

Top


Updated on 17 Feb 2015

Thursday, April 7, 2011

ஸ்யாமா ஸாஸ்த்ரி கிருதி - என்னேரமும் உன் பாத - ராகம் புன்னாக வராளி - Enneramum Un Pada - Raga Punnaga Varali

பல்லவி
என்னேரமும் உன் 1பாத கமல த்4யானம் 2செய்து-
கொண்(டு)ன்னை
நம்பினேன் நம்பினேன் நம்பினேன்

அனுபல்லவி
என்னை ரக்ஷிக்கச்-சொன்னேன் சொன்னேன்
சொந்த மைந்தன் நா(ன)ல்லவோ
அன்னை பின்னை(யு)ண்டோ எனக்கு
அகி2(லா)ண்(டே)ஸ்1வரீ ஸி1வ ஸ1ங்கரீ (என்னேரமும்)

சரணம்
சரனம் 1
ஆதி31க்தி உந்தன் மஹிமையை
துதி செய்ய(லா)குமோ பரமன்
முதலான பேருக்(கா)தியே 3பரஞ்-
சோதி
யே பங்கயக்-கண்ணியே
ஏ(த)ம்மா பரா-முகம் செய்யக்-
கூடா(த)ம்மா நீ கருணைக்-கட(ல)ல்லவோ (என்னேரமும்)


சரனம் 2
தாமரை இலை-மேல் தண்ணீர் போல்
தயங்குகிறாயே எந்தன்மேல் தயவு
செய்ய நல்ல தருண(மி)தே ஸி1
காமியே அபிராமியே அனுதினமும் உன்
நாமமே ஜபம் அல்லா(தொ)ன்றும்
நா(ன)றியே(னெ)னச்-சொன்னேன் தாயே (என்னேரமும்)


சரனம் 3
4நிலவின் வரவால் அல்லி மலர்
நிமிர்ந்து மலரவில்லையோ என்னை
நிலத்தில் வாழவைத்த அன்னையே
ஸனாதனியே புகழ்க்-கனியே மானியே
5தமியேன் எனக்(க)டைக்கலம் நேயமொடு
தருவ(து)ன் கடமை(ய)ல்லவோ தாயே (என்னேரமும்)


சரனம் 4
6ஸ்1யாம க்ரு2ஷ்ணன் சோதரீ உன்னை துதி
செய்யாம(லி)ருப்பேனோ உன் பாதங்களை
மறவாம(லி)ருக்க வரந்-தருவாயே ஸு1
ஸ்1யாமளே நித்ய கல்யாணீ
தாமத(மி)னி செய்தால் நா(னி)ப்போ
தாங்குவேனோ தாயே அகி2(லா)ண்(டே3)ஸ்1வரீ (என்னேரமும்)


பொருள் - சுருக்கம்
  • அகி2லாண்டேஸ்1வரீ! ஸி1வ ஸ1ங்கரீ!
  • ஆதி31க்தி! பரமன் முதலான பேருக்காதியே! பரஞ்சோதியே! பங்கயக்-கண்ணியே!
  • ஸி1வ காமியே! அபிராமியே! தாயே!
  • என்னை நிலத்தில் வாழவைத்த அன்னையே! ஸனாதனியே! புகழ்க் கனியே! மானியே!
  • ஸ்1யாம க்ரு2ஷ்ணன் சோதரீ! ஸு1க ஸ்1யாமளே! நித்ய கல்யாணீ! தாயே! அகி2லாண்டே3ஸ்1வரீ!

  • என்னேரமும், உன் பாத கமல த்4யானம் செய்து கொண்டு, உன்னை நம்பினேன், நம்பினேன், நம்பினேன்.

    • என்னை ரக்ஷிக்கச்-சொன்னேன், சொன்னேன்;
    • சொந்த மைந்தன் நானல்லவோ?
    • அன்னை பின்னை யுண்டோ எனக்கு?

    • உந்தன் மஹிமையை துதி செய்யலாகுமோ?
    • ஏதம்மா பரா-முகம்? செய்யக்கூடாதம்மா.
    • நீ கருணைக் கடலல்லவோ?

    • தாமரை இலை மேல் தண்ணீர் போல் தயங்குகிறாயே!
    • எந்தன்மேல் தயவு செய்ய நல்ல தருணமிதே.
    • அனுதினமும், உன் நாமமே ஜபம் அல்லாது, ஒன்றும் நானறியேன் எனச் சொன்னேன்.

    • நிலவின் வரவால், அல்லி மலர், நிமிர்ந்து மலரவில்லையோ?
    • தமியேன், எனக்கடைக்கலம், நேயமொடு, தருவதுன் கடமையல்லவோ?

    • உன்னை துதி செய்யாமலிருப்பேனோ?
    • உன் பாதங்களை மறவாமலிருக்க வரந்-தருவாயே.
    • தாமதமினி செய்தால், நானிப்போ தாங்குவேனோ?


  • என்னேரமும், உன் பாத கமல த்4யானம் செய்து கொண்டு, உன்னை நம்பினேன், நம்பினேன், நம்பினேன்.



பதம் பிரித்தல் - பொருள்
பல்லவி
என்னேரமும் உன் பாத கமல த்4யானம் செய்து-
கொண்டு-உன்னை நம்பினேன் நம்பினேன் நம்பினேன்


அனுபல்லவி
என்னை ரக்ஷிக்கச்-சொன்னேன் சொன்னேன்
சொந்த மைந்தன் நான்-அல்லவோ
அன்னை பின்னை-உண்டோ எனக்கு
அகி2ல-அண்ட-ஈஸ்1வரீ ஸி1வ ஸ1ங்கரீ (என்னேரமும்)


சரணம்
சரனம் 1
ஆதி ஸ1க்தி உந்தன் மஹிமையை
துதி செய்யல்-ஆகுமோ பரமன்
முதலான பேருக்கு-ஆதியே பரஞ்-
சோதியே பங்கயக்-கண்ணியே
ஏது-அம்மா பரா-முகம் செய்யக்-
கூடாது-அம்மா நீ கருணைக்-கடல்-அல்லவோ (என்னேரமும்)


சரனம் 2
தாமரை இலை-மேல் தண்ணீர் போல்
தயங்குகிறாயே எந்தன்-மேல் தயவு
செய்ய நல்ல தருணம்-இதே ஸி1
காமியே அபிராமியே அனுதி3னமும் உன்
நாமமே ஜபம் அல்லாது-ஒன்றும்
நான்-அறியேன்-எனச்-சொன்னேன் தாயே (என்னேரமும்)


சரனம் 3
நிலவின் வரவால் அல்லி மலர்
நிமிர்ந்து மலரவில்லையோ என்னை
நிலத்தில் வாழவைத்த அன்னையே
ஸனாதனியே புகழ்க்-கனியே மானியே
தமியேன் எனக்கு-அடைக்கலம் நேயமொடு
தருவது-உன் கடமை-அல்லவோ தாயே (என்னேரமும்)


சரனம் 4
ஸ்1யாம க்ரு2ஷ்ணன் சோதரீ உன்னை துதி
செய்யாமல்-இருப்பேனோ உன் பாதங்களை
மறவாமல்-இருக்க வரம்-தருவாயே ஸு1
ஸ்1யாமளே நித்ய கல்யாணீ
தாமதம்-இனி செய்தால் நான்-இப்போ
தாங்குவேனோ தாயே அகி2ல-அண்ட3-ஈஸ்1வரீ (என்னேரமும்)


குறிப்புக்கள் - (Notes)
வேறுபாடுகள் - (Pathanthara)
1 - பாத கமல த்4யானம் - பாத கமலமுல த்4யானம் : இந்த கிருதி முழுதும், தமிழிலும், போற்றிகள் ஸம்ஸ்கிருதத்திலும் உள்ளது. ஆனால் 'கமலமுல' என்பது தெலுங்காகும். எனவே இவ்விடத்தில் இது பொருந்தாது.

2 - செய்துகொண்டுன்னை - எல்லா புத்தகங்களிலும், 'செய்துகொண்டொன்னை' என்று கொடுக்கப்பட்டுள்ளது. அது தவறாகும்.

4 - நிலவின் வரவால் - எல்லா புத்தகங்களிலும், 'நிலவின் வரலால்' என்று கொடுக்கப்பட்டுள்ளது. தமிழில், 'வ' மற்றும் 'ல' கிட்டத்தட்ட ஒரே மாதிரி இருப்பதனால், 'வரவால்' என்பதற்கு பதிலாக, 'வரலால்' என்று தவறாக எழுதப்பட்டதாகக் கருதுகின்றேன்.

5 - தமியேன் - எல்லா புத்தகங்களிலும், 'தனியேன்' என்று கொடுக்கப்பட்டுள்ளது. ஆனால், 'தமியேன்' என்ற சொல்லுக்கான பொருள் கொள்ளப்பட்டுள்ளது. எனவே, 'தமியேன்' என்று ஏற்கப்பட்டது.

6 - ஸ்1யாம க்ரு2ஷ்ணன் - ஸ்1யாம க்ரு2ஷ்ண.

Top

மேற்கோள்கள்
3 - பரஞ்சோதி - லலிதா ஸஹஸ்ர நாமத்தில் (806), அம்மை இப்பெயரால் அழைக்கப்படுகின்றாள். இது குறித்து, கடோபநிடதத்தில் கூறப்பட்டது -

"அங்கு சூரியன் ஒளிர்வதில்லை; சந்திரன், தாரைகளும் கூட;
இந்த மின்னல்களும் ஒளிர்வதில்லை; இந்த நெருப்பும் எங்கே?
அஃதொன்றே ஒளிர, மற்று யாவையும் ஒளி பெருகின்றன;
அதன் ஒளியினால், இவை யாவும் ஒளிர்கின்றன." (2.2.15)
(ஸ்வாமி கம்பீராநந்தாவின் ஆங்கில மொழிபெயர்ப்பின் தமிழாக்கம்.)

Top

விளக்கம்
மானி - மதிக்கப் பெற்றவள்

Top


Updated on 07 Apr 2011

Saturday, April 2, 2011

ஸ்யாமா ஸாஸ்த்ரி கிருதி - ப்3ரோவ ஸமயமிதே3 - ராகம் புன்னாக வராளி - Brova Samayamide - Raga Punnaga Varali

பல்லவி
ப்3ரோவ ஸமய(மி)தே3 தே3வீ வினு
தே3வ ராஜ நுதா பர தே3வதா அம்பா3

அனுபல்லவி
பா4வ(ஜா)ரி ராணீ ப4க்த பாலினீ
4வானீ ப்3ரு2ஹத3ம்பா3 நனு (ப்3ரோவ)

சரணம்
சரணம் 1
அம்பு3ஜ த3ள நயனா விது4
பி3ம்ப3 நி(பா4)னனா க3ஜ க3மனா
அம்பி3கே பராகு ஸேய தகு3னா
பி3ம்(பா3)த4ரீ கௌ3ரீ குந்த3 ரத3னா (ப்3ரோவ)


சரணம் 2
அம்ப3ர சர வினுதா
1கத3ம்ப3 வன ப்ரியா ஸ்ரீ லலிதா
2கம்பு33ளா வர தா3ன நிரதா
தும்பு3ரு நாரத3 நுதா 3ஸங்கீ3த ரதா (ப்3ரோவ)


சரணம் 3
4ஸ்1யாம கி3ரி தனயா கு3
தா4ம கர த்4ரு2த மணி வலயா
ஸோம கலா த4ரீ ஸி1வ ப்ரியா
ஸ்1யாம க்ரு2ஷ்ண ஹ்ரு23(யா)ம்பு3ஜ நிலயா (ப்3ரோவ)


பொருள் - சுருக்கம்
  • தேவீ! தேவ ராஜன் போற்றும், பர தேவதையே, அம்பா!
  • காமன் பகைவனின் ராணீ! தொண்டரைப் பேணுபவளே! பவானீ! பெரியநாயகியே!
  • தாமரையிதழ் கண்ணினளே! மதி பிம்பம் நிகர் வதனத்தினளே! களிறு நடையினளே! அம்பிகையே! கோவையிதழினளே! கௌரீ! முல்லைப் பல்லினளே!
  • வானுறைவோரால் போற்றப்பெற்றவளே! கதம்ப வனத்தினை விரும்பும், ஸ்ரீ லலிதையே! சங்குக் கழுத்தினளே! வரமளிப்பதில் ஈடுபாடுடையவளே! தும்புரு, நாரதரால் போற்றப்பெற்றவளே! இசையில் மகிழ்பவளே!
  • கரு-நீல மலை மகளே! பண்புகளின் உறைவிடமே! கைகளில் மணி வளையல்கள் அணிபவளே! மதிப் பிறை அணிபவளே! சிவனுக்குப் பிரியமானவளே! சியாம கிருஷ்ணனின் இதயக் கமலத்தில் நிலைபெற்றவளே!

  • கேளாய்.
    • என்னைக் காப்பதற்கு தருணமிதுவே.

    • பராக்கு செய்யத் தகுமா?

    • என்னைக் காப்பதற்கு தருணமிதுவே.



பதம் பிரித்தல் - பொருள்
பல்லவி
ப்3ரோவ/ ஸமயமு/-இதே3/ தே3வீ/ வினு/
காப்பதற்கு/ தருணம்/ இதுவே/ தேவீ/ கேளாய்/

தே3வ/ ராஜ/ நுதா/ பர/ தே3வதா/ அம்பா3/
தேவ/ ராஜன்/ போற்றும்/ பர/ தேவதையே/ அம்பா/


அனுபல்லவி
பா4வஜ/-அரி/ ராணீ/ ப4க்த/ பாலினீ/
காமன்/ பகைவனின்/ ராணீ/ தொண்டரை/ பேணுபவளே/

4வானீ/ ப்3ரு2ஹத்-அம்பா3/ நனு/ (ப்3ரோவ)
பவானீ/ பெரியநாயகியே/ என்னை/ காப்பதற்கு...


சரணம்
சரணம் 1
அம்பு3ஜ/ த3ள/ நயனா/ விது4/
தாமரை/ யிதழ்/ கண்ணினளே/ மதி/

பி3ம்ப3/ நிப4/-ஆனனா/ க3ஜ/ க3மனா/
பிம்பம்/ நிகர்/ வதனத்தினளே/ களிறு/ நடையினளே/

அம்பி3கே/ பராகு/ ஸேய/ தகு3னா/
அம்பிகையே/ பராக்கு/ செய்ய/ தகுமா/

பி3ம்ப3/-அத4ரீ/ கௌ3ரீ/ குந்த3/ ரத3னா/ (ப்3ரோவ)
கோவை/ யிதழினளே/ கௌரீ/ முல்லை/ பல்லினளே/


சரணம் 2
அம்ப3ர/ சர/ வினுதா/
வான்/ உறைவோரால்/ போற்றப்பெற்றவளே/

கத3ம்ப3/ வன/ ப்ரியா/ ஸ்ரீ லலிதா/
கதம்ப/ வனத்தினை/ விரும்பும்/ ஸ்ரீ லலிதையே/

கம்பு3/ க3ளா/ வர/ தா3ன/ நிரதா/
சங்கு/ கழுத்தினளே/ வரம்/ அளிப்பதில்/ ஈடுபாடுடையவளே/

தும்பு3ரு/ நாரத3/ நுதா/ ஸங்கீ3த/ ரதா/ (ப்3ரோவ)
தும்புரு/ நாரதரால்/ போற்றப்பெற்றவளே/ இசையில்/ மகிழ்பவளே/


சரணம் 3
ஸ்1யாம/ கி3ரி/ தனயா/ கு3ண/
கரு-நீல/ மலை/ மகளே/ பண்புகளின்/

தா4ம/ கர/ த்4ரு2த/ மணி/ வலயா/
உறைவிடமே/ கைகளில்/ அணிபவளே/ மணி/ வளையல்கள்/

ஸோம/ கலா/ த4ரீ/ ஸி1வ/ ப்ரியா/
மதி/ பிறை/ அணிபவளே/ சிவனுக்கு/ பிரியமானவளே/

ஸ்1யாம/ க்ரு2ஷ்ண/ ஹ்ரு23ய/-அம்பு3ஜ/ நிலயா/ (ப்3ரோவ)
சியாம/ கிருஷ்ணனின்/ இதய/ கமலத்தில்/ நிலைபெற்றவளே/


குறிப்புக்கள் - (Notes)
வேறுபாடுகள் - (Pathanthara)
2 - கம்பு33ளா - கம்பு33ள.

3 - ஸங்கீ3த ரதா - ஸங்கீ3த ரதா3 : 'ரதா3' என்பது தவறாகும்.

Top

மேற்கோள்கள்
1 - கத3ம்ப3 வன ப்ரியா ஸ்ரீ லலிதா - கதம்ப வனத்தினை விரும்பும் ஸ்ரீ லலிதை - 'கத3ம்ப3 வன வாஸினி' - லலிதா ஸஹஸ்ர நாமம் (60) நோக்கவும். மதுரை, 'கதம்ப வனம்' எனப்படும். 'கதம்ப வன'த்தினைப் பற்றி, மேற்கொண்டு விவரங்கள் அறிய, ‘லலிதோபாக்கியானம்’ மற்றும் ஸ்ரீ வித்யா நோக்கவும்.

Top

விளக்கம்
4 - ஸ்1யாம கி3ரி தனயா - கரு-நீல மலை மகள் - இவ்விடத்தில் 'கரு-நீல மலை' என்பது 'இமய மலை'யைக் குறிக்கும். இவ்விடத்தில், வேறு எந்த பொருளும் பொருந்தாது. ஆனால், இமய மலைக்கு அத்தகைய பெயர் உண்டா என்று தெரியவில்லை.

காமன் பகைவன் - சிவன்
பெரியநாயகி - உலக நாயகி என்றும் கொள்ளலாம்
வானுறைவோர் - தேவர்கள்

Top


Updated on 02 Apr 2011