Thursday, April 21, 2011

ஸ்யாமா ஸாஸ்த்ரி கிருதி - து3ருஸுகா3 - ராகம் ஸாவேரி - Durusuga - Raga Saveri

பல்லவி
1து3ருஸுகா3 க்ரு2ப ஜூசி ஸந்தத-
(ம)ரோக3 த்3ரு241ரீரமுக3 ஸலுபு நனு

அனுபல்லவி
பரம பாவனி 2க்ரு2பாவனி வினுத
பத3 ஸரோஜ ப்ரண(தா)ர்தி ஹரு ராணீ
3பராகு 44ர்ம ஸம்வர்த4னி3ஹு
3பரா(க)மல கு3ணா த்ரிபுர ஸுந்த3ரீ (து3ரு)

சரணம்
சரணம் 1
நீ ஸன்னிதி4னி ஜேரி கொ3லிசின
நின்(னெ)புடு3 தலசே ஸுஜன
தா3ஸ ஜன பா4க்3ய(மெ)டு தெலுபுது3னோ
5ஸகல பாப ஸ1மனீ வினு
ஓங்காரி 6நியதி எடுலனோ
7நீ ஸா(டெ)வரே ஜக3ம்பு3லனு
8நே நிரதமு நினு கொ3லிசிதி (து3ரு)


சரணம் 2
ஏமோ 9கலத ஜெந்தி3 மனமுன
நே(னெ)ச்சட க3தி கா3னகனு
நீ மஹிம(லெ)ல்ல 10செவுலாரக3 வினி
ஈ மனஸுலோனி வெத தீ3ர்சுட(கீ)
11வேள ப3ஹு நிபுணா(வ)னி
காமாக்ஷீ நீவே வே(ரெ)வரு
கா(த3)னி தலசி கொ3லிசிதினி (து3ரு)


சரணம் 3
தா4ரா த4ரவி நீல கச லஸிதா
12ஸரஸ கவிதா நிசிதா
ஸார க4ன-ஸார ஸித 133ர ஹாஸிதா
வாரி ருஹ வாரி வத3(னோ)சிதா
14வா(கீ3)ஸ1 வினுதா ப்4ரு2த நதா
நாராயணீ 15ஸ்1யாம க்ரு2ஷ்ண வினுதா
16நா மனவினி வினு கி3ரி ஸுதா (து3ரு)


ஸ்வர-ஸாஹித்ய
ஸரோஜ நயன நத ஜன பாலினி(வ)னி
வேத3முலு மொர(லி)ட3கா3-
(னி)தரு(லெ)வரு மனவி வினு க்ரு2ப ஸலுப
பராகு ஸலுப ரா(தி3)க நீ(வி)புடு3 (து3ரு)


பொருள் - சுருக்கம்
  • முற்றிலும் தூயவளே! கிருபையுடையவளே! போற்றப்பெற்ற திருவடிக் கமலத்தினளே! பிரணதார்த்தி ஹரன் ராணியே! அறம் வளர்த்த நாயகியே! களங்கமற்ற குணத்தினளே! திரிபுர சுந்தரீ!
  • ஓ அனைத்து பாவங்களையும் தணிப்பவளே! ஓங்காரீ!
  • காமாட்சீ!
  • கார்முகல் நிகர், திகழும், கருங்குழலியே! (தன்னைப் புகழும்) இனிய கவிதைகள் நிறையப்பெற்றவளே! கர்ப்பூரத்தின் மணம் போலும் இனிய புன்னகையுடையவளே! தாமரை மலர்க் கொத்து போலும் பொருத்தமான வதனத்தினளே! நாமகள் மணாளனால் போற்றப்பெற்றவளே! அண்டியோரால் பணியப்பெற்றவளே! நாராயணீ! சியாம கிருஷ்ணனால் போற்றப்பெற்றவளே! மலை மகளே!
  • கமலக்கண்ணீ!

  • விரைவாக, கிருபை கூர்ந்து, எவ்வமயமும், நோயற்ற, திட சரீரத்தினனாக ஆக்குவாய், என்னை.
  • பராக்கு! கேளாய். எனது வேண்டுகோளினைக் கேளாய்.

    • உனது சன்னிதியினை அடைந்து, உன்னைப் புகழும், உன்னை எவ்வமயமும் நினைக்கும், நல்லோர், அடியார்கள் பேறு, எத்தகையது எனக் கூறவல்லேனோ (எப்படிக் கூறுவேனோ)?
    • நியதி எப்படியோ!
    • உனக்கீடு எவரே உலகத்தினில்?
    • நான், இடையறாது, உன்னைப் போற்றி செய்தேன்.

    • ஏதோ குழப்பமடைந்து, மனத்தினில் நான், எங்கும் கதி காணாது, உனது மகிமைகளையெல்லாம் காதாரக் கேட்டு, இவ்வுள்ளத்தின் துயர் தீர்ப்பதற்கு, இந்த வேளை, மிக்கு நிபுணியாக, நீயே, மற்றெவரும் இல்லை யென்றெண்ணி, போற்றி செய்தேன்.

    • 'பணிந்தோரைப் பேணுபவள்' என்று மறைகள் முறையிட, மற்றவர் யார் உளர்?
    • கிருபை செய்ய, கவனியாதிருத்தல் கூடாது, இனியும், நீ இப்போழ்து.


  • விரைவாக, கிருபை கூர்ந்து, எவ்வமயமும், நோயற்ற, திட சரீரத்தினனாக ஆக்குவாய், என்னை.



பதம் பிரித்தல் - பொருள்
பல்லவி
து3ருஸுகா3/ க்ரு2ப/ ஜூசி/ ஸந்ததமு/-
விரைவாக/ கிருபை/ கூர்ந்து/ எவ்வமயமும்/

அரோக3/ த்3ரு24/ ஸ1ரீரமுக3/ ஸலுபு/ நனு/
நோயற்ற/ திட/ சரீரத்தினனாக/ ஆக்குவாய்/ என்னை/


அனுபல்லவி
பரம/ பாவனி/ க்ரு2பாவனி/ வினுத/
முற்றிலும்/ தூயவளே/ கிருபையுடையவளே/ போற்றப்பெற்ற/

பத3/ ஸரோஜ/ ப்ரணத-ஆர்தி/ ஹரு/ ராணீ/
திருவடி/ கமலத்தினளே/ பிரணதார்த்தி/ ஹரன்/ ராணியே/

பராகு/ த4ர்ம/ ஸம்வர்த4னி/ ப3ஹு/
பராக்கு/ அறம்/ வளர்த்த நாயகியே/ மிக்கு/

பராகு/-அமல/ கு3ணா/ த்ரிபுர/ ஸுந்த3ரீ/ (து3ரு)
பராக்கு/ களங்கமற்ற/ குணத்தினளே/ திரிபுர/ சுந்தரீ/


சரணம்
சரணம் 1
நீ/ ஸன்னிதி4னி/ ஜேரி/ கொ3லிசின/
உனது/ சன்னிதியினை/ அடைந்து/ (உன்னை) புகழும்/

நின்னு/-எபுடு3/ தலசே/ ஸுஜன/
உன்னை/ எவ்வமயமும்/ நினைக்கும்/ நல்லோர்/

தா3ஸ ஜன/ பா4க்3யமு/-எடு/ தெலுபுது3னோ/
அடியார்கள்/ பேறு/ எத்தகையது என (எப்படி)/ கூறவல்லேனோ (கூறுவேனோ)/

ஓ/ ஸகல/ பாப/ ஸ1மனீ/ வினு/
ஓ/ அனைத்து/ பாவங்களையும்/ தணிப்பவளே/ கேளாய்/

ஓங்காரி/ நியதி/ எடுலனோ/
ஓங்காரீ/ நியதி/ எப்படியோ/

நீ/ ஸாடி/-எவரே/ ஜக3ம்பு3லனு/
உனக்கு/ ஈடு/ எவரே/ உலகத்தினில்/

நே/ நிரதமு/ நினு/ கொ3லிசிதி/ (து3ரு)
நான்/ இடையறாது/ உன்னை/ போற்றி செய்தேன்/


சரணம் 2
ஏமோ/ கலத/ ஜெந்தி3/ மனமுன/
ஏதோ/ குழப்பம்/ அடைந்து/ மனத்தினில்/

நேனு/-எச்சட/ க3தி/ கா3னகனு/
நான்/ எங்கும்/ கதி/ காணாது/

நீ/ மஹிமலு/-எல்ல/ செவுலாரக3/ வினி/
உனது/ மகிமைகளை/ யெல்லாம்/ காதார/ கேட்டு/

ஈ/ மனஸுலோனி/ வெத/ தீ3ர்சுடகு/-
இந்த/ உள்ளத்தின்/ துயர்/ தீர்ப்பதற்கு/

ஈ/ வேள/ ப3ஹு/ நிபுணா/-அனி/
இந்த/ வேளை/ மிக்கு/ நிபுணி(யாக)/ என/

காமாக்ஷீ/ நீவே/ வேரு/-எவரு/
காமாட்சீ/ நீயே/ மற்று/ எவரும்/

காது3/-அனி/ தலசி/ கொ3லிசிதினி/ (து3ரு)
இல்லை/ யென்று/ எண்ணி/ போற்றி செய்தேன்/


சரணம் 3
தா4ரா த4ரவி/ நீல/ கச/ லஸிதா/
கார்முகல் நிகர்/ கருங்/ குழலியே/ திகழும்/

ஸரஸ/ கவிதா/ நிசிதா/
(தன்னைப் புகழும்) இனிய/ கவிதைகள்/ நிறையப்பெற்றவளே/

ஸார/ க4ன-ஸார/ ஸித/ த3ர ஹாஸிதா/
இனிய/ கர்ப்பூரத்தின் (மணம் போலும்)/ உடையவளே/ புன்னகை/

வாரி ருஹ/ வாரி/ வத3ன/-உசிதா/
தாமரை மலர்/ கொத்து/ (போலும்) வதனத்தினளே/ பொருத்தமான/

வாக்/-ஈஸ1/ வினுதா/ ப்4ரு2த/ நதா/
நாமகள்/ மணாளனால்/ போற்றப்பெற்றவளே/ அண்டியோரால்/ பணியப்பெற்றவளே/

நாராயணீ/ ஸ்1யாம/ க்ரு2ஷ்ண/ வினுதா/
நாராயணீ/ சியாம/ கிருஷ்ணனால்/ போற்றப்பெற்றவளே/

நா/ மனவினி/ வினு/ கி3ரி/ ஸுதா/ (து3ரு)
எனது/ வேண்டுகோளினை/ கேளாய்/ மலை/ மகளே/


ஸ்வர-ஸாஹித்ய
ஸரோஜ/ நயன/ நத/ ஜன/ பாலினிவி/-அனி/
கமல/ கண்ணீ/ 'பணிந்தோரை/ பேணுபவள்'/ என்று/

வேத3முலு/ மொரலு/-இட3கா3/-
மறைகள்/ முறை/ யிட/

இதருலு/-எவரு/ மனவி/ வினு/ க்ரு2ப/ ஸலுப/
மற்றவர்/ யார் (உளர்)/ வேண்டுகோளினை/ கேளாய்/ கிருபை/ செய்ய/

பராகு/ ஸலுப/ ராது3/-இக/ நீவு/-இபுடு3/ (து3ரு)
கவனியாது/ இருத்தல்/ கூடாது/ இனியும்/ நீ/ இப்போழ்து/


குறிப்புக்கள் - (Notes)
வேறுபாடுகள் - (Pathanthara)
1 - து3ருஸுகா3 - து3ருஸுக3.

4 - 4ர்ம ஸம்வர்த4னி - த4ர்ம ஸம்வர்தி4னி

5 - ஸகல பாப ஸ1மனீ - ஸகல லோக ஜனனீ.

6 - நியதி எடுலனோ - நியதியடுலனோ.

7 - நீ ஸாடெவரே ஜக3ம்பு3லனு - நீ ஸாடெவரு ஈ ஜக3ம்பு3லனு.

8 - நே நிரதமு நினு கொ3லிசிதி - நே நிரதமுனு கொ3லிசிதி.

9 - கலத ஜெந்தி3 - கலக ஜெந்தி3 : 'கலத', 'கலக' ஆகிய இரண்டு சொற்களுக்கும், கிட்டத்தட்ட பொருள் ஒன்றுதான். ஆனால், அடுத்து வரும், 'ஜெந்தி3' (அடைந்து) என்பதனால், 'கலத' என்பதே பொருந்தும்.

Top

10 - செவுலாரக3 வினி - செவுலார வினி.

11 - வேள ப3ஹு நிபுணாவனி - வேள நிபுணாவனி.

13 - 3ர ஹாஸிதா - த3ர ஹஸிதா - த4ர ஹஸிதா : 'த4ர' என்பது தவறாகும்.

14 - வாகீ31 வினுதா - வாகீ31 நுதா.

15 - ஸ்1யாம க்ரு2ஷ்ண வினுதா - ஸ்1யாம க்ரு2ஷ்ண நுதா.

16 - நா மனவினி வினு - நா மனவினி வினி.

Top

மேற்கோள்கள்
4 - 4ர்ம ஸம்வர்த4னி - அறம் வளர்த்த நாயகி - திருவையாற்றில் அம்மையின் பெயர்.

12 - ஸரஸ கவிதா நிசிதா - இனிய கவிதைகள் நிறையப்பெற்றவள். இதற்கு மிகச்சிறந்த உதாரணமாக, கவி காளிதாசரின் 'சியாமளா தண்டக'த்தினைக் கூறலாம்.

Top

விளக்கம்
2 - க்ரு2பாவனி - இந்த சொல்லின் வடிவம் விளங்கவில்லை. ஆயினும் இதனை, 'கருணையுடையவள்' என்று மொழிபெயர்க்கப்பட்டது.

3 - பராகு - பொதுவாக, இந்த சொல்லுக்கு 'கவனமின்மை' என்று பொருளாகும். ஆனால், அரசவையில், அரசனின் வருகையை அறிவிக்கும் காவலர்களும், அவையோரின் கவனத்தினை ஈர்க்க, 'பராக்கு பராக்கு' என்று கூறுவது வழக்கம். புத்தகங்களில், இந்தப் பொருளே கொள்ளப்பட்டுள்ளது. அங்ஙனமே, 'கவனிப்பாய்' என்ற பொருளில் இங்கும் ஏற்கப்பட்டது.

Top

பிரணதார்த்தி ஹரன் - பணிந்தோர் துயர் களைவோன் - திருவையாறு சிவனின் பெயர் - தமிழில் ஐயாறப்பன்.
பராக்கு - கவனிப்பாய் என
நியதி - விதி வலிமை
நிபுணி - திறமையுடைத்தவள்
நாமகள் மணாளன் - பிரமன்
முறையிட - 'பறைசாற்ற' என்று பொருளாகும்

Top


Updated on 21 Apr 2011

No comments:

Post a Comment